முள்ளிவாய்க்கால் இரவுகள்.....
- Details
- Category: இதழ் -5
- Published on Thursday, 17 May 2012 00:04
- Written by ndpfront
- Hits: 645

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக
ஒளியில்லாத நிலவு கசிகிறது
முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன
வெள்ளிய மணல் கும்பங்களில்
கால்கள் புதைய நடக்கின்றேன்
கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் புதிய படங்களுடன் தொடரும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள்
- Details
- Category: இரயாகரன்
- Published on Tuesday, 19 February 2013 21:52
- Written by ndpfront
- Hits: 289
மேற்கு ஏகாதிபத்திய உலகமயமாதல் நிகழ்ச்சியுடன் முரண்படும் இலங்கைக்கு எதிரான, ஏகாதிபத்திய பிரச்சாரத்தின் அரசியல் எடுபிடிகளாக தமிழ்த்தேசியமும், தமிழ் ஊடகங்களும் இயங்குகின்றது. இலங்கை அரசுக்கு எதிராக இன்று பல முனையில் முன்னெடுக்கும் ஏகாதிபத்திய பிரச்சாரங்கள், தமிழ் மக்களின் மீட்புக்கான ஒன்றாக காட்டுகின்ற அரசியலுக்குள், வலதுசாரி தேசியம் முதல் இடதுசாரிய தேசியம் வரை புரளுகின்றனர். இதைத் தாண்டி மக்களைச் சார்ந்த எதையும் முன்வைப்பதில்லை. மக்களைச் சார்ந்து போராடும் அரசியலை எதிர்க்கும் இவர்கள், மாற்றாக மக்கள் அரசியல் எதையும் நடைமுறையுடன் முன்வைப்பதுமில்லை. இந்த அரசியல் பின்புலத்தில் தான், கொல்லப்பட்ட பிரபாகரனின் மகனின் படங்களை புதிதாக வெளியிட்டு செய்திகளையும், போர்க்குற்றங்கள் பற்றியும் பேசுகின்றனர்.
2009 இல் நாம் மட்டும் இந்தப் படுகொலைகளை அம்பலப்படுத்தி படங்களை வெளியிட்டதுடன், இலங்கையரசின் போர்க்குற்றத்தை தொடர்ச்சியாக அம்பலப்படுத்திய வண்ணம் இருந்தோம். அப்போது நாம் வெளியிட்ட காட்சியையும் போர்க்குற்றங்களையும் உறுதி செய்யும் வண்ணம், இன்று புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றது. 2009 ஆனி மாதம் இதை அம்பலப்படுத்தி நாம் எழுதிய போது
பிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம்
- Details
- Category: இரயாகரன்
- Published on Tuesday, 19 February 2013 09:17
- Written by ndpfront
- Hits: 280
மறுபிரசுரம்:
புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை. இந்தப் படுகொலையை, மனிதவுரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க அறிக்கை, மீள உறுதி செய்துள்ளது.
பேரினவாத பாசிசம், இதில் எப்படிப்பட்ட குற்றத்தை இழைத்துள்ளது.
1. சரணடைந்தவர்களை படுகொலை செய்து, பாரிய யுத்த கிரிமினல் குற்றத்தைச் செய்துள்ளது
2. குழந்தைகளை படுகொலை செய்து, குழந்தைக்கு எதிராக சதி மற்றும் சித்திரவதையுடன் கூடிய கொடூர குற்றத்தை செய்துள்ளது.
என் கடவுளே, என் கடவுளே ஏன் என்னைக் கை விட்டீர்!
- Details
- Category: விஜயகுமாரன்
- Published on Monday, 18 February 2013 22:51
- Written by ndpfront
- Hits: 292
எல்லாம் வல்ல தேவனின் உலகபிரதிநிதி, ஆண்டவனுடைய ராச்சியத்தை பூமியிலே வரப்பண்ணுகிற ஏஜெண்ட்டு, போப்பு உடல்நிலை காரணமாக பதவி விலகுகிறார். இளம் வயதிலே கிட்லரின் நாசியாக இருந்தவர் பின்பு கத்தோலிக்க துறவியாகிறார். இரண்டுமே தொடர்ச்சியானவை தான். சொல்லப் போனால் நாசிகள் ஒரு குறிப்பிட்ட பத்தாண்டுகளிற்கு தான் தமது அரசியல் மூலம் கொன்றார்கள். மதவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொல்கிறார்கள். கொலைகாரர்களிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஆன்மீகம் என்ற மயக்க மருந்து மூலம் மூளைச்சலவை செய்கிறார்கள். வெளிநாடுகளிற்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சிக்காரன் பத்து பேரில் ஒருத்தனையாவது அனுப்பி வைப்பான். ஆனால் சொர்க்கலோகத்திற்கு ஆட்களை அனுப்புவோம் என்று வாக்குறுதி கொடுக்கும் சோம்பேறி மடத்துக்காரர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெறும் வாய்ப்பேச்சிலேயே மக்களை மயக்கி வைத்திருக்கிறார்கள். ஊசியின் துவாரத்தினூடாக ஒட்டகம் நுழைந்தாலும் பணக்காரனால் சொர்க்கம் போக முடியாது என்றொரு வசனம் பைபிளில் வருகிறது. அந்த பைபிளை புனிதவேதம் என்று சொல்லும் இந்த போப்புகள், பிசப்புகள் மாளிகைகளில் பட்டாடை உடுத்தி பவனி வருகிறார்கள்.
அவதூறுகளையும் , பொய்ப்பிரச்சாரங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்
- Details
- Category: துண்டுப்பிரசுரம்
- Published on Sunday, 17 February 2013 23:21
- Written by ndpfront
- Hits: 279
கடந்த சில மாதங்களாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினராகிய எம் மீதும், எமது அரசியல் முன்னெடுப்புகள், கோட்பாடுகள் சார்ந்து பல மட்டங்களிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. விமர்சனங்கள் ஒவ்வொன்றும், அதை முன்வைப்பவர்களின் அரசியற் கோட்பாடு, வர்க்கநிலை, அவர் சார்ந்த அமைப்பின் அரசியல் கண்ணோட்டம், சுயவிருப்புகள் போன்றவற்றை பிரதிபலிக்கின்றன. தமிழ்தேசிய விடுதலை மற்றும் வர்க்கவிடுதலைப் போராட்டங்களை முன்னெடுக்கும் கோட்பாட்டு முரண்பாடுகளும், கருத்து வித்தியாசங்களும் இவ் விமர்சனங்களின் பிரதான உள்ளடக்கமாக, பேசுபொருளாக இருக்கின்றன. பெரும்பான்மையான விமர்சனங்கள் எம்மிடம் நேரடியாக எழுத்து மூலமும், தோழர்களுடனான விவாதங்கள் மூலமும் முன்வைக்கப்படுகிறது. வெகு சில விமர்சனங்களே இணையத் தளங்கள் மூலமும், மற்றும் பத்திரிகையூடாகவும் பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.
சில உண்மைகளைச் சார்ந்து கழுத்தை அறுக்கும், சனல் 4 காட்சியும், ஐ.நா.தீர்மானமும்
- Details
- Category: இதழ் -5
- Published on Sunday, 17 February 2013 17:45
- Written by ndpfront
- Hits: 221
ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சிகள், இந்திய ஆதரவு போன்றவை மக்கள் சார்ந்த சில கூறுகளைச் சார்ந்திருப்பதால் அவை மக்கள் சார்ந்ததாகிவிடுமா? இவை இலங்கை அரசுக்கு முரண்பாடாக இருப்பதால், இது முழுமையான உண்மையாகிவிடுமா?
மக்களைப் பார்வையாளராக்கிய கடந்தகால அரசியல், அன்னிய சக்திகளால் மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்று வழிகாட்டிய எமது கடந்தகாலப் போக்கு, சமூகத்தை மந்தையாக்கி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் ஐ.நா தீர்மானம், சனல்4 காட்சி, இந்திய ஆதரவு மீது குருட்டுத்தனமாக அவற்றை நம்பிப் பின்பற்றுகின்ற, அதை அரசியல் வழிகாட்டுகின்ற பின்புலத்தில் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். உண்மைகள் புதைக்கப்படுகின்றது. நீதி மறுக்கப்படுகின்றது. தங்கள் குறுகிய நோக்கத்துக்கு ஏற்ப இவைகள் உண்மையைப் புதைப்பதில் இருந்து தான் தொடங்குகின்றது. அது என்ன என்பதையும், எதற்காக இவை என்பதையும், தெரிந்து கொள்வதன் மூலம், இந்தச் சதியை, சூழ்ச்சியை நாம் இனம் காணமுடியும்.
மாணவர் போராட்டம் பற்றி!!! (பகுதி 2)
- Details
- Category: வேலன்
- Published on Wednesday, 13 February 2013 22:24
- Written by ndpfront
- Hits: 142

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தினை வளர்த்தெடுப்பதும் ஒரு போராட்டம் தான். வர்க்கப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு தடையாக இனவாதம், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் சமூகத்தில் ஆழவூடுவி இருக்கின்றது. கடந்த காலத்திலும் சரி எதிர்காலத்திலும் சரி இனத்துவ சிந்தனையை முன்வைத்தே தேர்தல் அரசியல் நடத்தப்படுகின்றது. ஜனநாயக மறுப்பை திசைதிருப்புவதற்கு இனவாதத்தினை பயன்படுத்தும் இனவெறி அரசாங்கமும், இராணுவ பிரசன்னதைக் கொண்ட பிரதேசத்தில் சிறு எதிர்ப்பபையும் காட்டாது வாழு என்று அறிவுறுத்தும் தரகுவர்க்கமும் இலங்கையில் இருக்கின்றது.
ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம்
- Details
- Category: அரசியல்
- Published on Monday, 11 February 2013 12:46
- Written by ndpfront
- Hits: 254

சம உரிமை இயக்கதினால் நாடு பூராகவும் இடம்பெற்று வரும் கலந்துரையாடல்களுல் ஒரு நிகழ்வாக நேற்று ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள என்.எம். பெரேரா ஞாபகார்த மண்டபத்தில் ஏன் இந்த குழப்பம் சிங்கள - முஸ்லிம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இந் நிகழ்விற்கு ருவன்வெல்ல பிரதேசத்தில் உள்ள சிங்கள,முஸ்லிம்,தமிழ் மக்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரவீந்ர முதலிகே...
மக்களை திவாலாக்கும் முதலாளித்துவம்... (பகுதி 1)
- Details
- Category: வேலன்
- Published on Monday, 11 February 2013 08:44
- Written by ndpfront
- Hits: 161
இலங்கையிலிருந்து சௌவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காரியாகத் தொழில் பெற்றுச் சென்ற றிசானா நபீக் எனும் மூதூரைச் சேர்ந்த இளம் பெண் மீது கொலைக்குற்றம் சுமத்தி அப் பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை உலகறிந்த விடயம். இந்த இளம் பெண்ணின் மரண தண்டனை குறித்து இன, மத பேதமற்ற மனிதாபிமான எதிர்க் குரல்கள் பரவலாக எங்கும் எழுப்பப்படுகின்றது. அவளது குடும்பத்திற்கான நிவர்த்தித் திட்டங்கள் பல பக்கத்தாலும் அறிவிக்கப்படுகின்றது.
அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்
- Details
- Category: திட்டம்
- Published on Saturday, 09 February 2013 13:57
- Written by ndpfront
- Hits: 839
2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
பத்திரிகைகளின் சுதந்திர செயற்பாட்டிற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் கிடைத்துள்ள மோசமான அடியும் அச்சுறுத்தலும்!
- Details
- Category: ஊடக அறிக்கைகள்
- Published on Friday, 08 February 2013 17:47
- Written by ndpfront
- Hits: 155
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நேற்று முன்தினம் அதிகாலையில் மூன்று முகமூடிக் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைக் கட்டுக்களும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் படுகாயமடைந்த அப்பணிப்பாளர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மிருகத்தனமான இத்தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலை புதிய-ஜனநாயகமாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிகவன்மையாகக் கண்டிக்கின்றது.
சமவுரிமைக்கு எதிராக, அரசுக்கு ஆதரவான பிரச்சாரம்
- Details
- Category: எமது வெளியீடுகள்
- Published on Thursday, 07 February 2013 17:08
- Written by ndpfront
- Hits: 216

சமவுரிமை இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் முடக்க அரசு இன்று "சமவுரிமை"யை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் சமவுரிமை இயக்கம் முன்வைத்துள்ள சமவுரிமைக்கான திட்டம் தான் அரசின் திட்டம் என்பது போல அரசுக்கு ஆதரவான வகையில் சிலர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். அரசின் "சமவுரிமை" தான், ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற இவர்கள் அரசு உச்சரிக்கும் சமவுரிமைக்கும்; ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை அரசியல் நீக்கம் செய்துவிடுகின்றனர். அரசியல் உள்ளடக்கமற்ற சொற்களைக் கொண்டு, மக்களை மந்தையாக மேய்க்கின்ற அரசியல் எல்லைக்குள், இதை குறுக்கிக் காட்டி விடுகின்றனர்.
"தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும்
- Details
- Category: துண்டுப்பிரசுரம்
- Published on Wednesday, 06 February 2013 23:01
- Written by ndpfront
- Hits: 218
ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? ஏமாறுவது மக்கள். இதற்கு இனம், மொழி, மதம், சாதி.. எதுவும் பிரிப்பதில்லை. மக்களை ஏமாற்றுவதில் கூட இனம், மொழி, மதம், சாதி பிரித்து இருப்பதில்லை. சுரண்டும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. அந்த வர்க்கம் சார்ந்த ஆளும் வர்க்கம் தான் ஏமாற்றுகின்றது. "தமிழன் இன்னுமொரு முறை ஏமாறக் கூடாது" என்பது கூட, தமிழனை தமிழன் ஏமாற்றுகின்றான்; என்பதை மறைப்பதற்கு "தமிழன் இன்னுமொருமுறை ஏமாறக் கூடாது" என்ற தர்க்கம் இனவாதமாகும் மறுப்பதற்குமான தர்க்கமாகும். இதுதான் 60 வருட தமிழனின் வரலாறு.
இந்தவகையில் இன்று யாரெல்லாம் மக்களுடன் இணைந்து போராடுவதை நடைமுறையில் ஒரு வாழ்வாக, உணர்வாக கொள்ளவில்லையோ, அவர்கள் மறுதளத்தில் நின்று கேள்வி கேட்கின்றார்கள். போராடாமல் இருப்பதற்காக, தாங்கள் இருப்பதை நியாயப்படுத்த கேள்வி கேட்கின்றனர். போராட்டத்தைச் சிதைப்பதற்காக கேட்கின்றனர். தங்கள் அறிவைக் காட்டிக் கொள்ள, பிரமுகராக இருக்க கேள்வி கேட்கின்றனர். போராடியபடி கேட்கவும், கேட்கப்படவும் வேண்டிய கேள்வியில் இருந்து இவை வேறுபட்டவை. எந்தக் கேள்வியையும் மக்களுக்காக போராடியபடி கேட்பதே உண்மையான ஒரு அரசியல் வேலைமுறை.
நிறுவனமயப்பட்ட இனவாதம்!
- Details
- Category: வேலன்
- Published on Wednesday, 06 February 2013 10:20
- Written by ndpfront
- Hits: 171

இது ஒரு புதிய ஆரம்பம், புதிய முறை, புதிய வழிதேடி, புதிய சந்தர்ப்பங்களை தேடி, புதிய இலக்கைத் தேடி ஆரம்பமாகின்றது. நாம் செல்லவேண்டிய இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. இன்று சமவுரிமை இயக்கத்தினரால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் போராட்டங்களில் பங்கு பற்றியவர்களின் தொகையல்ல, கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கையல்ல, கையெழுத்திட்டவர்களின் வயதல்ல முக்கியம். இந்த அடையாளப் போராட்டம் புதிய பாதைக்கான வழிகோளாக மாற்றப்பட வேண்டும். சமூகம் அடக்குமுறைக்குள் எந்தக் காலத்திலும் வாழ்ந்து விடப்போவதில்லை. எல்லாச் சமூகங்களின் எழுச்சி வீழ்ச்சியடைந்த பின்னர் மீளவும் எழுந்து வந்துள்ளது.
தம் இருப்பிற்காக போராடும் மேட்டுக்குடி தமிழ் தேசிய மையவாதிகள்!!
- Details
- Category: வேலன்
- Published on Tuesday, 05 February 2013 23:17
- Written by ndpfront
- Hits: 180
சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்லும் வேலையை செய்வதற்கு பற்பல முறைமைகளை சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகத்தளத்திற்கு பிரச்சனைகளை கொண்டு செல்வதும், சமூக மாற்றத்தை கோரும் நிலைப்பாடுகளை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளவைப்பதும் பெரும் சவாலான பிரச்சனையாகும். சமூகத்தளத்திற்கு கொண்டு செல்கின்ற போது ஏற்படும் சிக்கல்களை ஆராயந்து புதிய புதிய வடிவங்களில் மறுசீரமைத்து சமூகத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை இடையறாது சமூக மாற்றத்தை விருப்பும் சக்திகள் மேற்கொள்வார்கள். சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதற்கு ஒரு திட்டமிட்ட முறைதான் இருக்கின்றது என்றோ அல்லது இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்றோ எந்தவொரு நியதியும் இல்லை. அது நாட்டுக் நாடு சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. சமூகத்தளத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதும் மக்களை புரிந்து கொள்ளவைப்பதும் சவாலுக்கு உரியதாகும்.
ஆனால் எங்களுடைய மெத்தப்படித்த ஆய்வாளர்கள் ஏதோ சமூகத்தளத்திற்கு கொண்டு செல்வது அற்ப விடயம் போல புரிந்து கொள்கின்றார்கள். இவர்கள் எழுத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் புரிந்து கொள்வதற்கோ பொறுப்புடன் செயற்படுவதற்கோ தயாராக இல்லை. சமூகத்தளத்திற்கு செல்லும் முறைமையை சரியாக புரிந்து கொள்ளாது அவதூறு கற்பிப்பவர்களும் இந்தச் சமூக அமைப்பை பாதுகாப்பவர்களாக உள்ளார்கள்.
இலங்கையின் 65வது சுதந்திர தினம்- கண்டுபிடித்துத் தாருங்களேன்!
- Details
- Category: விருந்தினர்
- Published on Tuesday, 05 February 2013 15:22
- Written by ndpfront
- Hits: 204

ஆசியா கண்டத்தையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியத்தின் காவலர்கள் 1945 உலக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தங்கள் கட்டுப்பாட்டில் அடிமை ராஜ்ஜியங்களாக வைத்திருந்து சுரண்டிக் கொண்டிருந்த தெற்காசிய நாடுகள் சிலவற்றிற்கு சுதந்திரம் வழங்க ஆரம்பித்தனர்.
நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்லும்
- Details
- Category: ஊடக அறிக்கைகள்
- Published on Monday, 04 February 2013 17:58
- Written by ndpfront
- Hits: 155
"நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" லெனினின் இக் கூற்றுப் போல், நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டுரீதியாக பதில் சொல்லும். நடைமுறை ஒன்றாக, கோட்பாடு வேறொன்றாக இருக்க முடியாது. நடைமுறை மூலம் உருவாகும் வர்க்க சக்திகள், வேறு வர்க்க சக்தியாக மாற முடியாது. கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் உள்ள உறவே இதுதான்;. இனவாதத்துக்கு எதிரான நடைமுறை என்பது கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கோட்பாடு தன்னை வெளிபடுத்த முன் நடைமுறை முந்திக் கொள்கின்றது. கோட்பாட்டை முன்வைத்து கீழிருந்து மேலாக ஒரு கட்சியை உருவாக்காத இலங்கை சூழலில், இன்று ஒரு கட்சி நடைமுறை மூலம் கோட்பாட்டை கீழ் இருந்து மேலாக கொண்டு செல்லும் வர்க்க நடைமுறையைக் கொண்டு உருவாகின்றது. நடைமுறை மூலமான மறுகல்வி மறுப்பது வர்க்க ஆய்வு முறையல்ல, வர்க்க அரசியலுமல்ல.
அக்டோபர் புரட்சியின் நினைவாக ……….
- Details
- Category: அகிலன்
- Published on Wednesday, 24 October 2012 23:38
- Written by ndpfront
- Hits: 567

தேசிய இனப்பிரச்சினையில்--சுயநிர்ணய உரிமைப் பிரயோகம்
மனிதகுல வரலாற்றை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்த்தால், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் "கோட்பாட்டு உருவாக்கம்" முதலாளித்துவத்தின் பிறப்பிடத்திற்கு ஊடாகவே கரு உருவாக்கம் பெறுகின்றது. நிலமானிய சமூகத்திற்குள் நிலத்தோடு பிணைக்கப்பட்டவர்களின் வர்க்கப்போராட்டம் முதலாளித்துவ சமுதாயத்தில் பிரசவிக்கின்றது. இச்சமுதாயம் பிரசவிப்பதற்கு முன்பாக உலகில் நிலையான தேசம் என்பது எதுவுமே இருக்கவில்லை. இதற்கு முன்பான இச்சமூகப் புவியியல் நிலை பற்பல பேரரசுகளையும் - சிற்றரசுகளையும் கொண்ட முடியாட்சிகளைத்தான் தன்னகத்தே கொண்டிருந்தது. தேசங்களின் ஆரம்ப உருவாக்கம் ஐரோப்பாவை மையப்படுத்தியே உருவாகின்றது. 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகில் கிட்டத்தட்ட நூற்றுக்கு குறைவான தேசங்களே உருவாக்கம் பெற்றன.
முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!?
- Details
- Category: இரயாகரன்
- Published on Friday, 01 February 2013 13:43
- Written by ndpfront
- Hits: 187
சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.
இலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்
- Details
- Category: அரசியல்
- Published on Wednesday, 30 January 2013 19:05
- Written by ndpfront
- Hits: 314
FIRSTAUDIO.NET இணைய வானொலியில், காற்றலையின் அனுமதியோடு, "சம உரிமை இயக்கம்" பற்றிய அறிமுகமும் அதன் செயற்பாடுகள் குறித்த கலந்துரையாடலும். இந்நிகழ்வில் புதிய திசைகள் பாலன் அவர்கள் ஜரோப்பிய சமவுரிமை இயக்க உறுப்பினர்களுடன், இலங்கையிலிருந்து தோழர் பழ.ரிச்சார்ட் (இணை ஏற்பாட்டாளர், சமஉரிமை இயக்கம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை ஒலி வடிவில் கேட்க
தொடரும் கழுகுப்பார்வைக்குள், இன்று சிரியமக்கள் சிக்குண்டிருக்கிறார்கள்
- Details
- Category: வேலன்
- Published on Wednesday, 30 January 2013 09:25
- Written by ndpfront
- Hits: 170

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், யப்பான் போன்ற நாடுகள் தனியாகவும், இவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டுக்கு ஊடாகவும், சீனா போன்ற சமூக ஏகாதிபத்தியமும் உலகைப் பங்குபோட நாயாய் பேயாய் அலைகின்றன. உலகை பங்குபோடும் வேலையில் மூன்று துருவங்களாக (அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா – ரஷ்யா) பிரிந்துள்ள ஏகாதிபத்திய நாடுகளான இவை, தேவையானபோது சேர்ந்தும் அந்தந்தச் சூழலின் பொருட்டு தனியாகவும், இயற்கைவளம் பொருந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடாத்தி ஆக்கிரமிக்கின்றன. இதற்கு சமீபகால உதாரணமாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து என்ற தொடர்ச்சியில்; இன்று சிரியா மீது இவை தமது கோரப் பற்களைப் பதித்து, தமது அடிவருடிகள் மூலமான ஏவல் ஆட்சியை உருவாக்கப் பாடுபடுகின்றன.
More Articles...
- லண்டன் வானொலியில் சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்
- சிங்கள தமிழ் மொழி பேசும் தரப்புகள் கலந்து கொண்ட சமவுரிமைக்கான சுவிஸ் கூட்டம் பற்றி
- முள்ளிவாய்க்காலும் அபகரிக்கப்படப்போகிறது!
- புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் ஈழத்து பயணமும், பார்வையும்…!
- சிங்கள பௌத்த மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?
- களஆய்வுகளான உல்லாசப் பயணம்!!!!
- நாங்க இதுவும் சொல்லுவோம் இதுக்கு மேலேயும் சொல்லுவோம்!
- ஹக்கீம் ஐயா…. மகிந்த விசுவாசி?... அரச எதிர்ப்பாளர்?....முஸ்லிம் மக்கள் காவலன்!
- நான்கு சுவர்களுக்குள் மனித வதை - பாகம் - 02
- உடலாலும், சொல்லாலும் காயப்படுத்தப்படும் உயிரினம்
- தமிழ் தேசியவாதிகளின் கவனத்திற்கு !!!!
- "யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடன் விடுதலை செய்" சமவுரிமை இயக்கத்தின் ஊடக அறிக்கையும் படங்களும்
- இலங்கையில் எழுதப்படும் கிட்லர் சரித்திரம் நொருக்கப்படும்!
- புதிய எதிரி வந்துள்ளான்! அவன் எதிரில் நாம்...?
- அடக்குமுறையை எதிர்க்காமல், அடக்கு முறையை உடைத்தெறிய முடியாது!
- யாழ்-ராணுவத்தின் சப்பாத்துக் காலடிகளில் மக்கள் மட்டுமல்ல…… பொலிசாரும்தான்!
- கோத்தபாய, உழவர் திருநாளில் நாம் பொங்கலாமா..?
- மதப்பிடியில் இருந்து மேலும் சுதந்திரமான சிந்த்தனைக்கு கால்மாக்ஸ்சும் டார்வினுமே வழி திறந்தனர்…….! : நேர்காணல்
- பாராளுமன்றம் நீதிமன்றத்துக்கு வழங்கிய தூக்குத் தண்டனை!
- மனிதம் புதைகுழியிடுகுவையோ?








