Sun05202012

Last update09:16:48 AM

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel
மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்

அறியாமை , குழப்பம் , வெட்கம் எல்லாமும் கலந்து...

 

ஆப்பி...

சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?

சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?

"சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை...

Sinhala/English

படியுங்கள்

Back முகப்பு

யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!

இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள். முள்ளிவாய்க்காலின் யுத்த முடிவிற்குப் பின் தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பயங்கரவாதம் ஓழிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தமழ் மக்கள் பிரச்சினைக்க தீர்வு காணப்படுமென!

மலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.

மலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின்    அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.

யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......

தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்!

இந்தியன் ஆமி கொடுமையே செய்யவில்லை….ஜெயமோகன்!

நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை!.

அவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,

நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,

மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,

வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்

கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து

வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.

புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது

துப்பாக்கி வெடியொலியில்லை

நித்தம் சத்தமில்லாமல்

முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடர்கிறது

வதையிலும்

கத்திக்குளற வழியில்லை

புத்தனின் பெயரில் கொலுவிருந்து

வெள்ளைவான் கவ்விப்போகிறது

மூன்று ஆண்டுகளா யார்சொன்னார்..?

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

"தீப்பொறி" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.

மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.

தியாகங்கள்…

நம்பியதோர் லட்சியத்திற்காய்

போர்க்களத்தில் களமாடி

மடிந்த  தியாகங்களே!,

புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

முள்ளிவாய்க்கால் இரவுகள்.....

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்!

இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

முன்னணி இதழ் -5 வெளிவந்து விட்டது!

முன்னணி இதழ் -05,   இலங்கை மற்றும் உலக சமகால அரசியல் குறித்த பல ஆக்கங்களை தாங்கி வெளிவந்துள்ளது.

இந்த இதழில்

இனியொரு விதி செய்வோம்!.....யுகன்

சமர்ப்பணம்:

விளக்கின் ஒளி தேடியோடித், தீச் சூட்டில் கருகிப்போன

என் விட்டில் குழந்தைகளுக்குச் சமர்ப்பணம்.

**************************************************

(1)

எனக்கொரு ஊர் இருக்குப் பாருங்கோ

அதுக்கு ஒர் பெயரும் இருக்குப் பாருங்கோ!

பெயர் என்ன பெயர் ஊர்க் கதை பேசுவம் வாங்கோ (ஊர்க் கதை பேசுறதுதானே எங்களுக்குப் பிடிச்ச விசயம்)

மானுடப்பேரழிவுக்கு, மகிந்தா வைத்த பெயர் மனிதாபிமான நடவடிக்கையின் வெற்றிவிழா!

2009 மே 19 வரையான அவலக்குரல்கள் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. யுத்தம் ஏற்படுத்திய தாக்கம் மெல்ல மெல்ல எஞ்சிய உயிர்களை சாகடித்த வண்ணமேயுள்ளது. வறுமையின் கொடூரத்தை அனைத்து மக்களிடமிருந்தும் திசை திருப்புவதற்காய்---

அரசியல் பிழைப்புக்கு சொல்லும் அர்த்தங்கள்!

"தமிழ் மக்கள் தமது பிரச்சினைக்குத் தீர்வாகத் தமிழீழம் தான் வேண்டும் என்று கேட்கவில்லை".

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் தமிழீழம் கேட்காது என்கின்றார் கூட்டமைப்பின் சுமந்திரன்!

மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள்

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து...

 

ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. 13 கோடி பெண்களுக்குக் "கந்து" அகற்றல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ. நா. புள்ளிவிவரம் தருகிறது. நாளொன்று 6000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகச் சொல்கிறது.

"தமிழீழக் கட்சி"யின் பெயரில் மக்கள் நலன்சார் புரட்சிகர சக்திகளை காட்டிக் கொடுத்தவர்களின் புரட்டு வியாக்கியானம்

ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்ததாக கூறுகின்றனர்.

இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கியவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும்,  பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இது தான்.

தமிழ் - சிங்கள முன்னேறிய சக்திகள் ஒன்றிணைவதற்கான அரசியல் எது?- சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 02

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

சீமானும்-நெடுமாறனும் தமிழ் ஈழ குத்தகையாளர்களோ?

"சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை!..."

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட  இலங்கை தேவை என்று கூறும் போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? என, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் கேட்டுள்ளார்.

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள் - எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 56).

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள்

1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்ட்டிருந்த ஈழவிடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆரம்பமாகிவிட்டிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடியழிக்கும் இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

கொடியிலுள்ள சிங்கம், பத்திரகாளியம்மன் வாகனம் ----ஞானப்பால் அருந்தினார்

சம்பந்தர் ஜயா, கொடி பிடித்த விடயம் கூட்டமைப்பினரிடம் தமது வாக்கு வங்கியை சரித்து விடுமோ என்ற பீதியைக் கிளப்பி விட்டுள்ளது. இந்தப் புரளியோடு அம்மனின் வாகனம் சிறிலங்கா கொடியிலிருப்பதாய், தமிழரசுக்கட்சி நந்திக்கடல் வரைக்கும் சொல்லாத விடயம் சம்பந்தர் அந்நியப்பால் குடித்தவுடன் வெளிவரும் ஞாநோதயத்தைப் பாருங்கள். 

More Articles...

தேடுக

செய்தியின் மறுபக்கம்

உள்ளே

அரசியல்

எமது கருத்துக்கள் அல்லாதவை

නව ප‍්‍රජාතන්ත‍්‍රවාදී ජනතා පෙරමුණ

செய்திகள்