Thu05242012

Last update08:36:55 AM

Font Size

Profile

Direction

Menu Style

Cpanel
யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!

யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!

இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள்...

யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......

யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......

தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்! இந்தியன் ஆமி கொடும...

அவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்...

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர...

Sinhala/English

படியுங்கள்

Back முகப்பு

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு புரட்சிக்கு முந்தைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 04

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு, புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.

ஊடகங்களும் இனவாதிகளும்!

எரியும் இனவாத நெருப்பிற்கு எண்ணை ஊற்றும் வேலைகள்!

தமிம்-முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்!

மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்!

இந்தியர் செய்த இசை திருட்டுக்கு இலங்கை தமிழர்கள் நோர்வேயில் நாறடிக்கப்படுகிறார்கள் .

2003 இல் நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில், கரு.பழனியப்பனின் இயக்கத்தில், வித்தியாசாகர் இசையமைக்க வெளி வந்த திரைப்படம் பார்த்திபன் கனவு. இதன் சில பகுதிகள் இலங்கையில் படமாக்கபட்டுள்ளது. 

சரத் பொன்சேக்காவுக்கு விடுதலை; அரசியற் கைதிகளுக்கு ஏனில்லை?

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது?

இந்திய மாவோயிஸ்டுகளின் நில மீட்சிப் போர் இந்திய ஒடுக்கபட்டவர்களின் போர் மட்டும் அல்ல!!

அமெரிக்காவின் போர்ப்படைகள் நேரடியாக களத்தில் நிற்கும் நாடுகள் எவை என்ற கேள்விக்கு, அமெரிக்க செனட் சபை விசாரணை கமிசன் முன் பட்டியலிட்ட அதன் பொறுப்பதிகாரி ராபர்ட் விலார்ட் (Robert Willard) சொன்னது இதுதான்:

“இந்தியா, இலங்கை, வங்கதேசம், மாலைத்தீவுகள், உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமெரிக்க விசேச அதிரடிப்படைகள் நிலை கொண்டுள்ளன”.

மக்கள் விரோதிகளும், பிரபாகரன் என்ற பலியாடும்

பல ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதி அணுஅணுவாக ஆராய்ந்து, மக்கள் நலம் சார்ந்த பார்வையில், புலிகளின் அழிவை அரசியல் ரீதியாக எதிர்வு கூறியவர்கள், புலிகளின் அரசியல் பிரசாரத்துக்கு எதிராக அரசியலை முன்னெடுத்தோர் என பலர் இன்றும் தேசத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர் . அவர்கள் எவருமே பிரபாகரன் என்ற தனிமனிதனை எல்லா அழிவுக்கும், அரசியல் சீர்கேட்டுக்கும் தனியாளாக காரணம் என கூறியது கிடையாது.

அரச பாசிசத்தை புரிந்துகொள்ள புலிப் பாசிசத்தை புரிந்து கொள்ளல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 03

புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.

போலி இடதுகளும் மாணவர் போராட்டத்தின் வளர்ச்சியும்

"சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறை தமிழ் மாணவர்கள் மீதாக தொடருமானால், அன்று எப்படி மாணவர் சமூகம் அடக்குமுறையை உடைப்பதற்கு தள்ளப்பட்டார்களோ, அதே வழியில் எதிர்காலத்திலும் செயற்படுவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஆழமாக நம்புவார்கள் .

கண்ணீரை வரவைக்கும் அந்த இறுதிநாட்கள்..

வன்னி அவலமும், படுகொலைகளும் எங்கள் மனதோடு அழிக்க முடியாத பதிவுகளாக பதிவாகி விட்டது. மே பிறந்து விட்டால் அந்த அவலக் குரல்களும், கெஞ்சல்களும் எம்மை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. உண்மையாகவே மக்களை நேசிக்கும் உள்ளங்களால், இந்த உணர்வினை ஓரம் தள்ளி வைத்துவிட்டு தன் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது. இலட்சக் கணக்கான அந்த அப்பாவிகளின் கத்தலும், கதறலும் அவ்வளவு இலகுவில் எங்களை அமைதி கொள்ளவிடாது. மக்களுக்கெதிராக இந்த கொடுமைகளையும், துரோகத்தனத்தையும் இழைத்த அந்த ஒவ்வொரு அரசியல் அதிகார வெறியர்களையோ அவர்களின் சூழ்ச்சிகளையும், கபடநடவடிக்கைகளையும் என்றும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

பல்கலைக்கழக மாணவ தலைவர்கள் மீதான தொடர்ச்சியான அரச பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி?

வெறும் கண்டனங்களைக் கடந்து, இதை நாம் கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பதே எமது அக்கறை. இந்த சம்பவத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைக் கடந்து, எமது சமூகத்தின் மீதான அரசியல் பிரச்சனையாக கருதியே இதை அணுகுகின்றோம்.

யுத்த வெ(ற்)றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா!

இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள். முள்ளிவாய்க்காலின் யுத்த முடிவிற்குப் பின் தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பயங்கரவாதம் ஓழிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தமழ் மக்கள் பிரச்சினைக்க தீர்வு காணப்படுமென!

மலையத்தில் நிகழ்ந்த மக்களின் வீரம் செறிந்த போராட்ட அனுபவங்களிலிருந்து, மாற்று அரசியலை முன்னெடுப்போம்.

மலையக மக்களின் போராட்ட வரலாற்றுப் பக்கஙகளின்    அடையாள சின்னங்களாக விளங்குபவை பல. ஆனால் மலையக மக்களின் போராட்ட மார்க்கத்தை வெளிப்படுத்தியது சிவணு லெடசுமன் போராட்டமே.

யார் தான் பொய் சொல்கின்றார்கள்?......

தம்பி இப்பவும் உளார்….நெடுமாறன்!

இந்தியன் ஆமி கொடுமையே செய்யவில்லை….ஜெயமோகன்!

நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை!.

அவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..

வெஞ்சமரில் துஞ்சியவர் போனரென்று மிஞ்சியவர் நாமிருந்து,

நெஞ்சிருக்கும் பாரமெல்லாம் அஞ்சலிக்குள் அழுது வைத்து,

மயானத்தில் விறகிட்டுச் சிதை மூட்டிக் கொள்ளிவைத்து,

வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப, இடுகாட்டில் வாய்விட்டுக்

கதறிக் கண்ணீர்விட்டு, மனப்பாரம் இறக்கிவைத்து

வாழ்வதற்கு விடவில்லைத் துன்மதியர் துடிக்கவைத்தார்.

புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது

துப்பாக்கி வெடியொலியில்லை

நித்தம் சத்தமில்லாமல்

முள்ளிவாய்க்கால் யுத்தம் தொடர்கிறது

வதையிலும்

கத்திக்குளற வழியில்லை

புத்தனின் பெயரில் கொலுவிருந்து

வெள்ளைவான் கவ்விப்போகிறது

மூன்று ஆண்டுகளா யார்சொன்னார்..?

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 57

யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "

"தீப்பொறி" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.

மனிதப் பேரழிவு 2009 மே 16 - 17 - 18

மே 16-17-18.2009 என்ற நாட்கள் இலங்கைத் தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, மனிதப் பேரழிவின் உலக வரலாற்று  நாளாகும். அதில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுபகுதி, உலகத் தகவுகளில் அதிமுக்கியமான இடமாகும்.

தியாகங்கள்…

நம்பியதோர் லட்சியத்திற்காய்

போர்க்களத்தில் களமாடி

மடிந்த  தியாகங்களே!,

புலித் தலைவர்களின் மரணங்களுக்கு முன் முள்ளிவாய்க்காலில் நடந்தது என்ன?

தமிழ் சமூகம் இதைக் கடந்து வெளிவரவில்லை. பகுத்தறிவுடன் நடந்தது என்ன என்பதை சுயமாக அறிய முடியாத வண்ணம், சமூகம் மூடிய இருண்ட கற்பனையில் வழிகாட்டப்பட்டு இருக்கின்றது. நடந்த உண்மைகள் புதைக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து விடுபடமுடியாத அறியாமைக்குள் சமூகத்தை முடக்கி வைத்திருக்கின்றது. இதன் மீது தெளிவைப் பெறும்வண்ணம், அடிப்படைத் தகவல்களை கொண்ட உங்களுடனான ஒரு உரையாடல் தான் இது.

முள்ளிவாய்க்கால் இரவுகள்.....

ஓங்கி வளர்ந்திருந்த மரங்களினூடாக

ஒளியில்லாத நிலவு கசிகிறது

முடிவில்லாமல் கடல் அலைகள் கரைக்கு ஒதுங்குகின்றன

வெள்ளிய மணல் கும்பங்களில்

கால்கள் புதைய நடக்கின்றேன்

தியாகங்கள் வீண்போகாது என உறுதியேற்போம்!

இன்று பேரினவாத மஹிந்த ராஜபக்ஷாவின் அரசு இலங்கை முழுவதும் தனது ஒடுக்குமுறையை விரிவுபடுத்தியுள்ளது. புலிகள் இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசானது இன்று தனது பாசிசப் பயங்கரவாதத்தை அனைத்து மக்கள் மீதும் ஏவிவிட்டுள்ளது. அதேவேளை, தமிழினம் புலிப்பாசிசத்தால் தன் ஆன்மாவை இழந்து, நடைப்பிணமாக கைகட்டி நிற்கின்றது.

More Articles...

தேடுக

செய்தியின் மறுபக்கம்

உள்ளே

அரசியல்

எமது கருத்துக்கள் அல்லாதவை

නව ප‍්‍රජාතන්ත‍්‍රවාදී ජනතා පෙරමුණ

செய்திகள்