'வாகரையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிக்கின்றனர்'

'வாகரையில் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடல் அட்டை பிடிக்கின்றனர்'

மட்டக்களப்பு வாகரை கடற்பிரதேசத்தில் வெளி மாவட்டத...

மே-19-ன் நான்காவது ஆண்டில்….

மே-19-ன் நான்காவது ஆண்டில்….

பேரினவாத இன-வெறியர்களுக்கு "வெற்றிநாள்" ஆகலாம்?....

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு NDMLP ஆதரவு!

மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்களுக்கு NDMLP ஆதரவு!

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் அன்றாடப் பாவன...

ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!

ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்க...

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

ஐ.நா ஊழியர்களை தண்டிப்பது யார்?

ஐ.நாவின் ஊழியர்...

Sinhala/English

மேதின  நிகழ்வில் தோழர்.  ரிச்சர்டின் உரை ( வீடியோ )

 "போராட்டம்" இதழ் நான்கு  வெளிவந்து விட்டது.

கனடா மற்றும் ஜரோப்பா எங்கும்

பெற்றுக்கொள்ளலாம்.

Back முகப்பு

இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 29

ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தொடரவும் அதைப் பாதுகாக்கவும் போராடிய ஒரு தலைவர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க ஸ்டாலினின் நடத்திய பேராட்டத்தில் சரிகளையும் தவறுகளையும் ஆராயும் போது, அவதூறுகளை அது தரைமட்டமாக்குகிறது. ஸ்டாலின், வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் பாத்திரம் என்பதன் மூலம், அவர் நேர்மையாக பாட்டாளி வர்க்கத்துக்காக போராடினார் என்பதும், ஸ்டாலினால் இதை விட எதுவும் செய்ய முடியாது என்று கூறும் அனுதாபம் அல்லது வரலாற்றை விளக்கும் எல்லா அடிப்படையின் பின்பும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டுச் செல்வதை கோருகின்றது. ஸ்டாலின் காலம் அதிகார வர்க்க ஆட்சி, அது கம்யூனிசத்தை நோக்கிச் செல்லும் சோசலிசம் அல்ல, என்ற அனைத்து விளக்கமும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுக்கின்றது. இவைகளை முன் வைப்போர் ஏன்?, எப்படி? .. என்பதை முன்வைப்பதில்லை. இதை முன்வைக்க முடியாத போது அவதூற்றை விரும்பியவாறு வைப்பது நிகழ்கிறது.

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 04

முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்

தமிழினப் படுகொலையின் போது இலங்கை அரசுக்கு துணை செய்து கொலைகளத்தில் மறைமுக பங்கேற்ற ஐ. நா அதிகாரிகளையும், அதன் பின்னிருந்த இந்திய, அமெரிக்க, சீன அரசுகளின் செயல்பாட்டினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச் சமூகமாய் விரிந்து நிற்கிற ஐ. நாவின் உயர் அதிகாரிகள் இனப்படுகொலையில் மௌனமாகவும், நேரடியாகவும் பங்கெடுத்த நிகழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டும்.

முள்ளிவாய்க்கால் படுகொலையும், தொடரும் இனவாதமும்

 

இனவாதத்தை பேரினவாதிகள் மட்டும் கொண்டிருக்கவில்லை, பேரினவாதத்துக்கு எதிரானவர்களுக்குள்ளும் இனவாதமே தொடருகின்றது. இனவாதம் எங்கும் எப்போதும் மக்களுக்கு எதிரானது. முள்ளிவாய்க்கால், யூலைப் படுகொலை .. என அனைத்தையும் இனவாதம் ஊடாக அணுகி குறுக்கி விடுகின்ற இனவழிவுவாதமே, இன்று இலங்கையின் மைய அரசியலாகத் தொடருகின்றது.

முள்ளிவாய்க்காலின் தோல்வியும், படிப்பினையும்

இலங்கையில் தொடருகின்ற இன ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் எதிராக வாக்குப்போடுவதன் மூலமும், அமெரிக்காவை நம்புவதன் மூலமும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியுமா? இப்படி செயற்படும் எமது அரசியல் சரியானதா? இதில் முள்ளிவாய்க்கால் வரை நம்பிய அரசியல் ஏன் தோற்றுப் போனது என்பதைத் தெரிந்துகொண்டால், நாம் நம்பும் அரசியலின் தோல்வியையும் தெரிந்துகொள்ள முடியும். அத்துடன் நாம் எப்படிப் போராடவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ளவும் முடியும்.   

மே-19-ன் நான்காவது ஆண்டில்….

பேரினவாத இன-வெறியர்களுக்கு "வெற்றிநாள்" ஆகலாம்?...

தமிழ் மக்களுக்கும், இனவாதத்தை வெறுப்போர்க்கும் துக்கநாள்!

இன்று முதல் ஒருமாத காலத்தை "முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்" வெற்றி விழாவாக கொள்ளலாம். அதற்கான கொடியேற்றத் திருவிழா இன்று முதல் ஆரம்பமாகி, முப்பதாவது நாளில் மகிந்தா-கோத்தபாயவின் (வைரவர்) மடை- வேள்வியுடன் முடிவடையும்.

இவ்வொரு மாதகாலம் மகிந்தாவிற்கும் அதன் பாசிஸ - இனவெறி கொண்ட ஆட்சிக்கும் வெற்றி விழாவாக இருக்கலாம். தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல, எம் நாட்டின் தேச-பக்த ஜனநாயக-முற்போக்கு மாத்திரமல்ல, இனவாதத்தை வெறுப்போர்க்கும், சகல இனவாதங்களுக்கும் எதிராக போராடும் போராட்ட சக்திகளுக்கும், மக்களுக்கும் பெரும் துக்கமும் சோகமும் கொண்ட கரிநாட்கள் ஆகும்.

ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!

இரவு பகல் என்றில்லாமல் கரியபுகை திறந்த வெளியெங்கும் நிறைந்து வழியும். குண்டுகளின் மரண வேட்டுக்கள் வீசி அடித்த வினாடிகளில் சின்னக்குஞ்சுகளின் சிரிப்புக்கள் செத்துப் போகும். ஓடிக்கொண்டிருந்த மனிதர்களின் வியர்வையுடன் நிகழ்கால வாழ்க்கை, எதிர்கால நம்பிக்கைகள் எல்லாமே கசிந்து காற்றிலே கரைந்து போகும். காட்டுவழி எங்கும் போக்கிடம் இன்றி போய்க்கொண்டிருந்த மனிதர்களிடம் மரணபயம் ஒன்றே மிச்சமிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மனிதகுலத்தின் மனச்சாட்சியை அந்த மனிதர்களின் மரண ஓலங்கள் பிடித்து உலுப்பிக் கொண்டுதான் இருக்கும். இதயமுள்ளவர்களின் கண்களில் இருந்து கண்ணீரும் சென்னீரும் கரைந்து கொண்டு தான் இருக்கும்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

ஐ.நா ஊழியர்களை தண்டிப்பது யார்?

ஐ.நாவின் ஊழியர்கள் பொதுவாக அரசியல் நாடு பேதமில்லாது நடக்குமாறு கோருகின்றது. இவர்கள் பொதுவாக வேலை செய்ய முற்பாட்டாலும் புறநிலை இவர்களை அனுமதிப்பதில்லை. இதற்கு இவர்கள் கொண்டுள்ள சிந்தனை முக்கியமாகின்றது. இவ்வாறான தனிநபர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மீது அக்கறை கொள்கின்றனர் என்பது உண்மை. ஆனால் இதில சிறிய வித்தியாசம் இருக்கின்றது. பொதுவுடமையாளர் சிந்தனையில் பார்க்கின்ற போது இவர்கள் சுரண்டல் அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கிலேயே செயற்பட்டுக் கொள்கின்றனர். இதனை ஏற்றுக் கொள்ளாவிடினும் இதுவே இன்றைய சமூக நியதியாக இருக்கின்றது. ஈராக் மீது இவ்வூழியர்கள் நடந்து கொண்டார்கள் எனப்பார்ப்போம்.

சோசலிசக் கவிதைகள்

எனக்கு ஆருயிர்க் காதலி

ஒருத்தி இருந்தால்

ஒரு இரவின் முடிவில் - அவள்

போலீஸ்காரர்களால்

படுகொலை செய்யப்பட்டாள்.

 

ஏ! காடே ! நீ என் ஆருயிர்க் காதலியாய் இரு !

நீயே என் மணப்பெண்.

என் இதயத்தின் அன்பு

வெளிச்சமிடுகின்றது, வெள்ளமாய் ஓடுகிறது.

அந்தக் காதல் வார்த்தைகளை- நான்

எப்போழுதும் சொல்லத்துணிந்ததில்லை !

ஆனால்.... அருமைக்காடே !

உன் செவிகளில் மெதுவாக உச்சரிக்கிறேன்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02

மனித உரிமைககள் பற்றி

நீதியை நிலைநாட்டுவது பற்றி உலகின் பாகங்களிலும் உள்ளவர்கள் எல்லோராலும் பேசப்படுகின்றது. மனித உரிமைகள் முழுச்சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. மனித உரிமைகள் பற்றி 1975 இல் கெல்சிங்கியில் (பின்லாந்து) சுற்றில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில், இது குறிப்பாக சோசலிச சமூக அமைப்பிற்கு நேர்மாறான கருத்தை வலியுறுதிக் கொண்ட இந்த நிலைப்பாடானது. அன்றைய காலத்தில் பிரஸ்சிநேவ் தலைமையில் இருந்த சோவியத் ஒன்றியம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பின் இடையே தொடர்ச்சியாக அமெரிக்க மனித உரிமை பற்றி இன்று வரைக்கும் வலியுறுத்தி வருகின்றது. மேற்கு தேசங்களின் மனிதவுரிமைக் கோரிக்கையானது கட்டுப்பாடற்ற உழைப்பாளிகளை கோரியதான நிலைப்பாடுகளில் இருந்து அமைந்திருக்கின்றது.

கோமாளிகளின் கூடாரமாகவுள்ள வடமாகாணசபைத் தேர்தல்….

வடக்கின் மாகாணசபைத் தேர்தல் "வரும் ஆனால் வராது" எனும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் இத்தேர்தல் அரசின் சிற்சில எடுபிடிகளால் கோமாளித்தனத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

"பிரிவினைவாதத்துடன் கூடிய வடக்கு தேர்தல் வேண்டாம் என்ற தொனிப் பொருளில் நாட்டு மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. இதற்காக பத்து லட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது"

இதுபோக புலிகளின் முன்னாள் ஊடகத்துறை இணைப்பாளர் தயா மாஸ்ரர் வடக்குத் தேர்தலில் அரசு முதலமைச்சர் வேட்பாளராம்…

மே தினம் கொண்டாடிய மேதகு பிள்ளையான் வாழ்க!

அண்ணே, நம்பவே முடியவில்லை. சிவப்புக்கொடி சடசடத்து பறக்குது. அண்ணனும், அண்ணனின் பாசக்கார பயலுகளும் சிவப்புச்சட்டை, சிவப்பு காற்சட்டை போட்டுக்கொண்டு சின்னப்பிள்ளைத்தனமா திரியிறீங்க. மன்னிச்சுக் கொள்ளுங்கோ சிங்கம் மாதிரி போறீங்க. அண்ணே நீங்க எதையும் ஒரு குறை விடாமல் செய்யிற ஆள், அதனாலே கோவணம் கூட சிவப்பிலே தான் கட்டியிருப்பிங்க. ஆனா சில பொறாமை பிடிச்ச நாய்கள், மண்டை கழண்ட மடையனுகள் கேக்கிறானுகள் இதெல்லாம் ஒரு பிழைப்பா, தொழிலாளர் தினம் கொண்டாட ஒரு விவஸ்தை வேண்டாமா? மகிந்துவோடை கூட்டு வைச்சுக் கொண்டு தொழிலாளர்களின் உரிமைகளை பற்றி கோசம் போடுறது ரொம்ப கேவலமா இருக்கு. கேக்கிறவன் கேனைப்பயலா இருந்தா கோத்தபாயாவின் மண்டையிலே சன் ரீ.வி தெரியுது எண்டு சொன்னாலும் சொல்லுவீங்க என்கிறானுகள்.

பன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...!

பங்களாதேஷ் தொழிற்சாலை விபத்தும் அதன் அழிவுகளும் மனித நேயத்தினை உலுப்பி விட்டுள்ளது. குறுகிய கால இடைவெளிக்குள் பல ஆயிரக்கணக்கானவாகள் தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளார்கள். ஒன்பது மாடிக்கட்டிட இடிபாட்டில் ஒருசிலர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்கள், ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளார்கள்.

வயிற்றுப் பிழைப்புக்காக நாளாந்த போராடும் ஏழை உழைப்பாளியின் உயிர் தீ விபத்துக்குள்ளும், கட்டிட இடிபாடுகளிலும் அர்த்தமற்று அழிந்து போகிறது. எல்லாரையும் போல நானும் வாழ வேண்டும், குடும்பம் குழந்தைகளை பராமரிக்க வேண்டும் என்ற நினைப்போடு தொழிலுக்கு செல்லும் மனிதன் பிணமாக மீட்கப்படுகிறான்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

இலங்கை குறைமுதலாளித்துவ வரலாற்றைக் கொண்ட தேசங்களில் முதலாளித்துவ நிறுவன அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு சோல்பரி, டொணமூர் ஆணைக்குழு போன்றவற்றை அமைத்து அரசியல் சட்டங்களை சிபாரி செய்தும் உருவாக்கியும் கொண்டது. முதலாளித்துவ அரச நிறுவனத்தில் ஆணைக்குழு ஒரு முறைமை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுக்கள் என்பது தேசங்கள் தொடங்கி சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு அலகுகளில் உருவாக்கப்பட்டும் நீதியை நிலை நாட்டப்படுவதாகவும், நடுநிலையாக செயற்படுவதாகவும் காட்டப்படுகின்றது.

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 (இறுதிப் பாகம்)

தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்

அவ்வாறான ஒரு காலகட்டத்தில் கியூ பொலிஸ் அதிகாரியின் அலுவலகத்தில் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனைச் சந்திக்க முடிந்தது. எம்மை மகேஸ்வரனிடம் அறிமுகப்படுத்தி எமது கஸ்டமான நிலைமைகளைச் சொல்லி ஏதாவது பணவசதி செய்ய முடியுமா என்று கேட்டோம். அவரோ தன்னிடம் இருந்த பணத்தினை இந்திய அதிகாரிகள் பறித்து விட்டனர் என்றும் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று தான் திருப்பித் தருகிறார்கள் என்றும் தாம் யோசித்து முடிவு சொல்வதாகவும் கூறினார்.

அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமூக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆசாத் சாலியின் கைதானது, ஒரு தனிமனிதனுக்கு எதிரானதல்ல. இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் சுயாதீனமான அரசியல் குரலை அடக்கி நசுக்குவதற்கு இலங்கை அரசு இப்போது பயங்கரவாத தடைச் சட்டத்தினை ஆசாத் சாலி மீது மீது பிரயோகித்துள்ளது.

ஆசாத் சாலியின் குரலை நசுக்கும் அரசின் முடிவும், இரும்புப்பிடியான ஆதிக்க அத்துமீறலும் சமகாலத்திலும் எதிர்காலத்திலும் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும், விடப்படக் காத்திருக்கும் செயல்களுக்கு எதிராக, முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து விடுதலை, சுதந்திரம், சமத்துவம், நீதி, மனிதாபிமான அடிப்படையில் எழுகின்ற குரல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத் தயங்கோம் என்கிற அடக்குமுறை சமிக்ஞையாகவும் முஸ்லிம்களை நோக்கிய எச்சரிக்கையுமாகவே அர்த்தம் காணவேண்டும்.

இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02

மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.

காசி ஆனந்தன் அண்ணே, நீங்க பாவியா, அப்பாவியா?

மட்டக்களப்பு தொகுதி ஒரு தமிழர், ஒரு முஸ்லீம் என இரட்டை அங்கத்துவர் தொகுதியாக கட்சிகளால் வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதி. எழுபத்தேழு தேர்தலில் கூட்டணி சார்பில் ராசதுரையும் மற்றொரு முஸ்லீம் வேட்பாளரும் போட்டியிடுவது என்ற முடிவை எதிர்த்து முஸ்லீம் வேட்பாளரின் இடத்தில் நான் தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்து போட்டியிட்டு தேர்தலில் தோற்றவர். அதன் மூலம் மட்டக்களப்பு முஸ்லீம் மக்களின் வாக்குகள் பேரினவாதக்கட்சிகளிற்கு போக காரணமாக இருந்தவர். இன்று சென்னையில் இருந்து கொண்டு “நேற்றும் இன்றும் நாளையும் இந்தியாதான் எங்கள் அண்டைநாடு, ஈழமக்களின் உரிமைகளுக்கு இந்தியாதான் உதவ வேண்டும், இந்தியாவை விட்டு வேறு எந்த நாட்டிடம் நாங்கள் ஆதரவு கேட்போம்?” என்று இந்திய அரசிற்கு அடிமை உணர்ச்சி பொங்க வாழ்த்துப்பா பாடுகிறார்.

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 9

பசியும் பசியைப் போக்க நாம் கையாண்ட தந்திரமும்

மீண்டும் எமது சாப்பாட்டு நிலைமைகள் (பிரிந்த பிறகு) நாம் அன்றாடம் செய்யும் வேலைகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தது. நாம் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் இன் பிரிவான ஈ.பி.ஐ.சி தகவல் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒரு தடவையாவது சென்று எமது தொடர்புகளை அவர்களுடன் வைத்திருந்தோம். ஈ.பி.ஐ.சிக்கு செல்லும்போது மத்தியான சாப்பாட்டு நேரம் பார்த்து செல்லத் தொடங்கினோம். அவர்கள் எம்மைக் கண்டவுடன் சாப்பிடச் சொல்லுவார்கள். அவர்களின் சாப்பாடு எமது நிலைமையை விட வசதியானது. மற்றும் அவர்களும் எமது நிலைமையை அறிந்து உதவி செய்தார்கள்.

ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக

முஸ்லிம் சமூகத்தின் குரலாக மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக பேசிவரும் ஆசாத் சாலியின் கைதானது, கருத்துச் சுதந்திரத்தின் மீதும், ஜனநாயக வரையறைகள் மீதும் நிகழ்த்தப்பட்டுள்ள பாரிய அத்துமீறலாக அமைந்துள்ளது.

இன்று காலை முன்னாள் கொழும்பு மாநகர பிரதி மேயரும் முஸ்லிம் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான ஆசாத் சாலி அவர்கள் இலங்கை அரச படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை அரசானது முஸ்லிம் மக்களை ஒடுக்குகின்ற நடவடிக்கையை தீவிரப்படுத்தி, முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும் அம்மக்களுக்கு குரல் எழுப்புகின்ற சமூக அரசியல் குரல்களை அச்சுறுத்தி நசுக்குவதற்கும் தயார் நிலையில் உள்ளதை அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது. ஒடுக்கப்படுகின்ற மக்கள் சார்பில் குரல் கொடுப்பவர்களின் குரல்களை நசுக்குகின்ற இத்தகைய நடவடிக்கையினை இலங்கை முஸ்லிம்களுக்கான புலம்பெயர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

மே தினம் தொழிலாளருக்காகவா? கட்சி ஆதரவாளர்களுக்காகவா?

மே தினம் என்பது கட்சி அரசியலுக்கு அப்பால் சென்ற தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் தினமாகும். சர்வதேச தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் தினமாகும்.1886 மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகர ஹேமார்ட சதுக்கத்தில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் தமக்கு 8 மணிநேர வேலை நேரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக கோஷமெழுப்பினார்கள்.

இந்த கோஷத்தைக் கண்டு கொதித்தெழுந்த முதலாளிகள் தமது ஏவல் நாய்களை அவிழ்த்துவிட்டனர் துப்பாக்கியைக் கையிலேந்திய அந்த ஏவல் நாய்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்தனர். அவ்விடத்திலேயெ சுருண்டு விழுந்த பல தொழிலாளர்களின் இரத்தத்தால் அந்தச் கதுக்கமே இரத்தக்காடாகியது. அன்றைய தினம் உயிர் நீத்த தொழிலாளர்களை உலகம் பூராகவுமுள்ள தொழிலாளர்கள் ஒன்று சேரும் தினமாகும்.

சம உரிமை இயக்கத்தின் மேதின முழக்கங்கள்!

1. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சியை நிறுத்து!

Abolish military rule in North & East

2. மக்களினது வாழ்வுரிமைக்காக போராடுவோம்!

Let us fight for peoples' right to live

3. வடக்கு கிழக்கில் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக போராடுவோம்!

Let us align against the pillage of lands in North & East

More Articles...

தேடுக

000585979
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
2538
2108
15177
552787
61789
73977
585979

Your IP: 184.72.91.94
Server Time: 2013-05-24 23:18:53

உள்ளே

அரசியல்

எமது கருத்துக்கள் அல்லாதவை

නව ප‍්‍රජාතන්ත‍්‍රවාදී ජනතා පෙරමුණ

செய்திகள்