சிங்கள மக்கள் மத்தியில் திட்டமிட்ட சில தீய சக்திகள் இனவாதத்ததை பரப்பி வருகின்றன: என்.எம். அமீன்
- Details
- Category: இதழ் -2
- Published on Tuesday, 18 June 2013 19:23
- Written by ndpfront
- Hits: 20
இன்றைய சூழ்நிலையில் இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நவமணி பத்திரிகையின் ஆசிரியரும், பேராதனை பல்கலைக்கழக முன்னால் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஜனாப் என்.எம். அமீன் அவர்களோடு போராட்டம் பத்திரிகை நடத்திய நேர்காணலிலிருந்து…..

போராட்டம்: இன்றைய நிலையில் நாட்டில் 65வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினம் பற்றிய உங்களது கருத்து என்ன?
என்.எம். அமீன்: இந்தக் கேள்வியைக் கேட்கும்போது சுதந்திரம் என்ற ஒன்று இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஊடக சுதந்திரம் இருப்பதாக சொன்னாலும் கூட இன்று மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் கருத்தை அவரின் சுய விருப்பத்தின் பேரில் வெளியிடுவதுதான் சுதந்திரம் என்பது. ஆனால் பத்திரிகையாளர்களால் சுதந்திரமாக கருத்து தெரிவிக்க முடியாதுள்ளது. அப்படி மீறிவெளியிட்டால் அவர் மாற்றுக் கண்கொண்டு பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் சுதந்திரம் என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
நோய்நொடி – வர்க்கபேதம் இல்லாத வாழ்வைத் தேடி...!
- Details
- Category: தேவன்
- Published on Monday, 17 June 2013 19:00
- Written by ndpfront
- Hits: 42

இன்று உலகநாடுகளில் அதிவேகமாக வளர்ந்து வரும் பணவீக்கம் மக்களின் அன்றாட சாதாரண வாழ்க்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், மின்சாரம், தண்ணீர்... போன்ற அன்றாடம் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களின் திடீர் திடீர் விலையேற்றத்தால் மக்கள் வாழ்க்கையினை ஓட்ட மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், கட்டுப்பாடற்ற தேவைக்கு மீறிய உற்பத்தி, பொருட்களின் விரயம் என்று முதலாளித்துவ அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள் யாவும் சாதாரண அப்பாவி மக்களின் தலையில் வந்து வீழ்கின்றது.
மக்களுக்குத் தேவையானதொன்று மறைக்கப்பட்டு வேறொன்று உற்பத்தி செய்யப்படுகின்றது
- Details
- Category: விருந்தினர்
- Published on Sunday, 16 June 2013 10:35
- Written by ndpfront
- Hits: 35
கடந்த காலங்களில் ஏற்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு எங்களிடம் தான் உள்ளது என்று மக்களை நம்பவைக்க தங்களை அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் முயற்சித்தார்கள். மனித வர்க்கத்திற்குள் அவன் ஆரம்பம் தொட்டே பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது. ஆனால் அது தனது வர்க்கத்தில் உள்ள வேறொரு மொழியை, மதத்தை, சாதியை இன்னும் பல அடையாளங்களைக் கொண்ட மனித இனத்தை அழிக்க முற்பட்டதில்லை.
வெள்ளையின வெறியை வளர்த்து விடும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- Details
- Category: விஜயகுமாரன்
- Published on Friday, 14 June 2013 19:38
- Written by ndpfront
- Hits: 159

தெருவில் போகும் ஒரு மனிதனை கொன்று விட்டு அப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் கொல்லப்படும் முஸ்லீம் மக்களிற்காக பழிக்குப் பழி, இரத்தத்திற்கு இரத்தம் என வெட்டிய கத்தியை இறுக்கிப் பிடித்தபடி குருதி வழிந்தோடும் கைகளை உயர்த்தியபடி குழந்தைகள் பள்ளி விட்டு வரும் தெருவில் நின்று கொண்டு வெறியாட்டம் ஆடியவர்கள் நிச்சயமாக போராளிகளாக இருக்க முடியாது. அவர்கள் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள். உலகெங்கும் ஒடுக்கப்படும் இஸ்லாமிய மக்களை இவர்களைப் போன்றவர்கள் இத்தகைய வெறிச்செயல்களின் மூலம் மேலும் மேலும் ஒடுக்குமுறைக்குள் தள்ளி விடுகிறார்கள். ஒடுக்குகின்ற ஆதிக்கசக்திகளிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற எதிரியை தொடர்ந்து கட்டமைத்து கொள்ள துணை போகிறார்கள்.
நினைவுப் பறவைகள்..... (சிறுகதை)
- Details
- Category: நிலாதரன்
- Published on Friday, 14 June 2013 00:07
- Written by ndpfront
- Hits: 61

ஓடி ஓடி கடைசியிலே கிடைத்தது ஒரு மூண்டரை மணித்தியால வேலை தான். அதுவும் விடிய மூண்டரைக்குத் தொடங்க வேண்டும். என்ன வீட்டிலே தான் ஒண்டும் கிளீன் பண்ணுறதில்லை, வெளியேயாவது போய் பண்ணுவோம் என்று நினைத்து அன்போடு அதை ஏற்றுக் கொண்டேன்.
இந்தச் சம்பளம் பொடியனுக்கு சப்பாத்து வாங்கவும் மிஞ்சிற காசுக்கு கொஞ்ச வாழைப்பழமும் வாங்கததான் காணும்.
சந்தர்ப்பம் வர மிகுதி நேர வேலை தருவேன் என உறுதியளித்தாள் மொனிக்கா.
நேற்று தோழர் பினாயக் சென் இன்று தோழர் மனுவேல்!
- Details
- Category: விருந்தினர்
- Published on Thursday, 13 June 2013 11:08
- Written by ndpfront
- Hits: 137

மக்கள் ஊழியர்கள் மக்கள் விரோதி என்றால் ........ இந்த அரசு மக்களுக்கு யார் ?
1897 ல் பாலகங்காதர திலகர் மற்றும் 1922 ல் மகாத்மா காந்தி உள்ளிட்ட இந்திய தேசத் தலைவர்களுக்கு வாய்பூட்டு போடுவதற்காக பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் எச்சமான இந்திய குற்றவியல் பிரிவு 124 (பிரிவினை) ஐ பினாயக் சென்னுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்தியது அரசு தரப்பின் மிக பிற்போக்கான குணத்தை நிரூபித்தது ...
இன்று மீண்டும் மேற்குத்தொடர்ச்சி மலைவாழ்மக்கள் உரிமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் மனுவேல் .. நேற்று சத்தியமங்கலம் காவல் துறையால் விசாரணை என்ற பெயரில் அழைத்து செல்லப்பட்டு .. பின் கைது செய்யப்பட்டு 124 தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ...
இலங்கை அராஜக அரசே! லலித், குகன் இருவரையும் உடன் விடுதலை செய்க!!
- Details
- Category: விருந்தினர்
- Published on Thursday, 13 June 2013 08:22
- Written by ndpfront
- Hits: 89

கோத்தபாயாவின் வெள்ளைவான் கும்பல்களினால் கடத்தி செல்லப்பட்டு சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டிருக்கும் சமஉரிமை இயக்க தோழர்களான லலித, குகன் இருவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இதற்காக அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.
சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யுமாறு கோரியத்தற்காக இவ்விரு தோழர்களும் அரச குண்டர்படைகளால் கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் சித்திரவதை செய்யப்பட்டு இரகசியமாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேபோல் இராணுவத்தால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட யுவதிகளுக்காக நியாயம் கேட்ட மருத்துவர் சிவசங்கர் “மெண்டல” என முத்திரை குத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொல்லவரும் கூடன்குளம் அணு உலைகள்!!
- Details
- Category: இதழ் -2
- Published on Wednesday, 12 June 2013 00:22
- Written by ndpfront
- Hits: 153

தென்னிந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் கூடன்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணுஉலைகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. கூடங்குளத்தை அண்மித்த பிரதேசங்களிலும் தென்னிந்தியாவிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இலங்கையிலும் கூடன்குளம் அணுஉலைக்கு எதிரான பிரச்சாரங்கள் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. இவற்றிற்கு மத்தியில் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்படும் இரண்டு அணுஉலைகளில் ஒன்றின் நிர்மாணப் பணி நிறைவிற்கு வந்துள்ளமை பெரும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
டக்ளஸ் பத்துப் பெரும் கேள்விகளுக்கு பதில் சொல்லி பாஸ் பண்ணிவிட்டாராம்… இது கொண்டு மக்கள் மனங்களை வெல்வாரா?
- Details
- Category: அகிலன்
- Published on Tuesday, 11 June 2013 14:26
- Written by ndpfront
- Hits: 164

டக்ளஸ் தேவானாந்தா கடந்தவாரம் வீரகேசரிப் பத்திரிகைக்கு பத்துப் பெரும் கேள்விகளுக்கு பதில் எழுதி "பாஸ் பண்ணின புளகாங்கித்த்தில" சில அரச அடியாட்களும், அவர்களின் ஊடகங்களும் அமளி-துமளியாக செய்திகள் எழுதி துள்ளிக் குதிக்கின்றன. பார்த்தியா அவரின் கேள்விகளுக்கான பத்திரமான பதில்களை என பரவசமடைகின்றார்கள்.
மலையக தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக்காக போராட முன்வர வேண்டும்!
- Details
- Category: இதழ் -2
- Published on Tuesday, 11 June 2013 00:36
- Written by ndpfront
- Hits: 80

ராசையா ஒரு தோட்டத் தொழிலாளி. ஹல்வத்துர தோட்டத்தில் வேலை செய்கிறார். 28 வயது. 3 குழந்தைகள். வழமைபோல் வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் இடத்தில் காய்ந்து இற்றுப்போன மரமொன்று இருக்கின்றது. அந்த மரத்திற்கு பட்டும் படாமலும் 33000 வாட்ஸ் மின்சார கடத்திக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை பார்க்கும் சுபவைசர் வந்து அந்த மரத்தை வெட்டும்படி ராசையாவிடம் கூறுகிறார். மின்சாரக் கம்பி இருப்பதால் அதனை வெட்டுவது ஆபத்தை வலிய அழைத்துக் கொள்வதாக இருக்கும் எனவே அதை வெட்ட ராசையா மறுத்துவிடுகிறார். தொழிலாளி தனது ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான ஆக வேண்டுமென்ற இறுமாப்போடு மரத்தை வெட்டாவிட்டால் வேலை தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சுபவைசர் பயமுறுத்தவும் ராசையா ஒருகணம் யோசிக்கிறார், வேலையை விட்டு தூக்கிவிட்டால் தனது குடும்பம் பட்டினியால் துன்பப்படும். பிள்ளைகளின் படிப்பு நின்றுவிடும். யோசிக்கிறார். ' என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ மரத்தை வெட்டு" என்று சுபவைசர் தையிரமூட்டுகிறார். என்ன நடந்தாலும் நடக்கட்டும். மரம் என்ன தலையிலா விழப்போகிறது என்று கோடரியால் மரத்துக்கு இரண்டு வெட்டுதான் கொடுத்தார். மரம் சாய்ந்து மின்சாரக் கம்பியில் பட்டுவிட்டது. மரத்தில் கைவைத்த ராசையா ஐம்பதடி தூரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார். மரம் மாத்திரமல்ல அதோடு அவரது வாழ்க்கையும் சாய்ந்து விட்டது.
தொடரும் நெருக்கடிகள். முதலாளித்துவம் தீர்வு காணுமா? மக்கள் புரட்சியை முன்னெடுப்பார்களா?
- Details
- Category: விருந்தினர்
- Published on Sunday, 09 June 2013 15:02
- Written by ndpfront
- Hits: 88

இங்கிலாந்தில் வேலையில்லா திண்டாட்டம் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு அளிக்க வக்கற்ற அரசு தொடர்ந்தும் வறிய மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை படிப்படியாக குறைத்து வருகிறது. சூரியன் அஸ்திமிக்காத ராஜ்யஜியத்தை வைத்திருந்த ஏகாதிபத்தியம் இன்று மக்களின் வறுமையை போக்க முடியாமல் திண்டாடுகிறது. ரஜ்சிய மற்றும் சீன புரட்சிக்கால கட்டத்தில் தங்கள் நாட்டிலும் ஒரு புரட்சி வருவதைத் தவிர்க்கும் பொருட்டு மானியங்களை வழங்கிய ஏகாதிபத்தியங்கள் இன்று இந்த புரட்சி அபாயம் இல்லை என்று வழங்கிய மானியங்களை நிறுத்துகின்றன. கூகிள் போன்ற பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் மில்லியன் கணக்கில் வரி ஏய்ப்பு செய்கின்றன. அவ்வாறான முதலாளித்துவ கம்பெனிகளிடமிருந்து வரி அறவிடுவதை விடுத்து வறிய மக்களுக்கு வழங்கும் மானியங்களை நிறுத்துகின்றன. இதனால் வறிய மக்கள் சமாளிக்க முடியாமல் கடன் சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.
கட்டமைப்பின் மாற்றத்தை நோக்கி!!!
- Details
- Category: வேலன்
- Published on Saturday, 08 June 2013 22:33
- Written by ndpfront
- Hits: 127

உழைக்கும் மக்களுக்கான விடுதலையை வென்று எடுப்பது என்பதுதான் இன்று எம்முன்னால் இருக்கின்ற அரசியல். அதாவது உழைக்கும் மக்களுக்கான உரிமையை உறுதி செய்யாத வலதுசாரிய சமூகக் கட்டமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமாக வென்றடையலாம். ஆயினும் ஒரு சமூகக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருவதற்கான அடுத்த கட்டப் போராட்டத்திற்கு நகர்வதற்கு எதிராகவும், முக்கிய பிரச்சினையாக இருப்பது எதிர்ப்புரட்சிகர சிந்தனைக் கூறுகளும் செயற்பாடுகளுமாகும். ஆகவே தான் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொள்ள வைப்பதற்கான யுத்த - அரசியல் தந்திரோபாயத்தை, சமூக மட்டத்தில் இருந்து வகுப்பது இதில் அவசியமாகின்றது. இதில் நாம் முன்னோக்கிச் செல்வதற்கான வரலாற்றுக் கடமையை செய்து முடிப்பதற்கு எம்மை நாம் இதில் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய கட்டாயமும் தேவையும் இருக்கின்றது. அத்துடன் உற்பத்திச் சாதனத்தை உடைமையாக்குவதன் ஊடாக அனைத்து உற்பத்திச் சக்திகளை உயர்ந்த தளத்திற்கு மாற்றி அமைப்பதற்கு, சமூக மேற்கட்டுமானத்தின் நிறுவனங்களின் பாத்திரத்தினையும் இந்தச் சமூக அமைப்பின் தன்மையில் இருந்து ஆராயவேண்டியுள்ளது.
வன்னியர் -தலித் ஆனால் நாம் தமிழர்
- Details
- Category: சுஜீவன்
- Published on Sunday, 09 June 2013 10:57
- Written by ndpfront
- Hits: 111

தாஜ்மகால்
செருக்கிய சிற்பிகள் வாழ்வை
யாரும் சிந்திக்கப்போவதில்லை,
காதலுக்கு நினைவுச்சின்னங்கள்
யார் எழுப்பினர்
தமிழினமே தமிழகமே !
இனவாதத்திற்கெதிரான இன ஜக்கியம்
- Details
- Category: இதழ் -2
- Published on Thursday, 06 June 2013 23:26
- Written by ndpfront
- Hits: 111

இன்று எமது நாடு இனவாததின் காலபோகத்தில் உள்ளது. கடந்த அரைநூற்றாண்டு காலமாக விதைக்கப்பட்ட இனவாத அரசியலின் விளைச்சலை இன்று எம்நாட்டு மக்கள் அறுவடை செய்து கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதமும், சிறுபான்மையினரிடையே உள்ள தமிழ்த்தேசிய இனவாதமும்தான் எம்நாட்டு மக்களின் "இனவாதவித்தாகும்".
சுதந்திரத்திற்கு முன்பாகவே இனவாத அரசியல் முளைவிட ஆரம்பித்தாலும், சுதந்திரத்தின்பின் மாறிமாறி வந்த இனவாத அரசுகளின் வினையாற்றல்கள்தான் சிறுபான்மையினரிடையே இனவாதமாக தோற்றம் பெற்றது. இதை மலையக மக்களின் குடியுரிமை இல்லாதாக்கப்ட்டதுடனும், தனிச் சிங்களச சட்டத்தின் வருகை கொண்டும் காணமுடியும். "சிங்கள மக்கள் மத்தியில் தென்னிந்தியா பற்றிய அச்சங்கள் நீண்ட காலமாகவே இருந்து வருகின்றன.
இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013
- Details
- Category: சம உரிமை இயக்கம்
- Published on Sunday, 02 June 2013 12:21
- Written by ndpfront
- Hits: 97
இலங்கை அரசியலும் புலம்பெயர் அரசியலும் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் உரையாற்றிய இரயாகரனின் உரையின் ஒலிவடிவம் 25.05.2013
சிங்கள மக்களின் பிரச்சினைக்கு மதவாதம் தீர்வாகுமா?
- Details
- Category: இதழ் -2
- Published on Wednesday, 05 June 2013 00:44
- Written by ndpfront
- Hits: 84

இலங்கையில் நூற்றாண்டு காலமாக சிங்கள- முஸ்லிம் மக்களுக்கிடையே நிலவி வந்த நல்லுறவிற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் கடும்போக்கு பௌத்த குழுக்களினால் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. ஒற்றுமையாக சகோதரத்துவ மனப்பாங்குடன் வாழ்ந்த சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் இனவாதத்தை தூண்டியதன் காரணமாக நாட்டை பிணக்காடாக்கிய யுத்தம் மூன்று தசாப்தங்களாக நடந்தது. அதன் காரணமாக இந்த நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இன, மதவேறுபாடின்றி சாகடிக்கப்பட்டார்கள்.
சஞ்சீவ பண்டார விளக்கமறியலில் அரசின் அராஜகத்திற்கு எதிராக தொடரும் மாணவர் போராட்டங்கள்!
- Details
- Category: அகிலன்
- Published on Monday, 03 June 2013 12:46
- Written by ndpfront
- Hits: 134

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார பேருந்தொன்றில் பயணித்துக் கொண்டிருந்தவேளை நேற்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டhர். கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சஞ்சீவ பண்டாரவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றில் கோரப்பட்ட போதிலும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணைகளுக்காக எதிர்வரும் 25ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 06 (இறுதிப்பாகம்)
- Details
- Category: வேலன்
- Published on Saturday, 01 June 2013 15:52
- Written by ndpfront
- Hits: 61

இடதுசாரிகளின் தாக்குதலா?
இடதுசாரிகளின் பலம் ஐரோப்பாவில் ஒங்கியுள்ளதாக கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மாகிரட் தட்சர் சிலி நாட்டின் சர்வாதிகாரியான பினோச்சே மீதான கைதைத் தொடர்ந்து தட்சர் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கையை கண்டித்தார். இவர் இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்தார். அத்துடன் பினோச்சேவிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவித்துக் கொண்டார். யூக்கோ மீதான தாக்குதலை இடதுசாரிகளின் தாக்குதலாக கணித்திருந்தனர். இந்தக் கட்சியில் 1989 பின்னால் இருந்த பிரதமர், நிதி மந்திரிகள் இடம் பெறுகின்றனர்.
பாவமன்னிப்புகள்...... (சிறுகதை)
- Details
- Category: நிலாதரன்
- Published on Thursday, 30 May 2013 22:19
- Written by ndpfront
- Hits: 113

அவன் எந்த நாளும் ஒரே குடிதானே, ஏதோ ஈரலிலே தான் பிழையாம், சீ சீ.... அவனுக்கு இரண்டு கிட்னியும் பெயிலாப் போச்சாம், ஏற்கனவே ஆளுக்கு நல்ல சுகர் வருத்தமுமாம், அதோடை கைப்பிறஸர்... எண்டும் குளஸ்ரோல் எண்டும் சொல்லினம்... இப்படி ஆயிரம் ஆயிரம் கதைகள்.
ஆனா... எது உண்மை, எது பொய்யெண்டு ஒருத்தருக்கும் சரியாகத் தெரியாது. ரவீந்திரனை கொஸ்பிற்லிலே விட்டிருக்காம் என்ற சேதி கேள்விப்பட்ட பிறகு இந்தச் தமிழ்ச் சனங்கள் மத்தியிலே இப்ப இது தான் பெரிய கதை.
தனித்து ஒரு விசேட பிரிவிலே அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்வைக்காக ஒருத்தரும் அனுமதிக்கபடவில்லை. என்னுடைய மகனோடு தான் கதைக்க அனுமதிக்க வேண்டும் என்ற ரவியின் விருப்பத்தின் பேரில் மகன் சுரேந் இன்று வந்திருந்தான்.
பணம் படைத்த நாடுகளின் நீதிமன்றத்தில் ...
- Details
- Category: வேலன்
- Published on Wednesday, 29 May 2013 21:22
- Written by ndpfront
- Hits: 90
நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 05

பனாமா நாட்டின் அதிபராக இருந்த மனுவல் நொரேகா என்பவர் அமெரிக்காவின் நண்பானாக இருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்காத காரணத்தினால், அல்லது அமெரிக்காவிற்கு வரவேண்டிய போதைப் பொருளினால் வரவேண்டிய வருமானத்தை தடைசெய்ததால் என்னவோ பனாமாமீது ஆக்கிரமித்து அமெரிக்கா கைது செய்தது.
இதற்கு இன்றுமொரு உதாரணமாக சிலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பினோச்சே பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே நேரத்தில் ஸ்பானிய நீதிமன்றத்தில் காணாமல் அல்லது கொல்லப்பட்ட ஸ்பானிய தேசத்தவர்களின் மறைவிற்கு பினோச்சே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடரும் பொருட்டு பினோச்சேயை ஒப்படைக்கும் படி ஸ்பானியா கோரிக்கை விட்டது. இதனைப் பரிசீலனை செய்த பிரித்தானிய நீதிமன்றம் இறுதியாக ஸ்பானியாவிடம் ஒப்படைக்கும் படி தீர்ப்புக் கூறியுள்ளதுடன், ஒப்படைக்கக் கூடிய நிலையில் பினோச்சேயின் உடன் நிலை இருக்கின்றதா என மருத்துவ பரிசோதனை செய்யும் படி உத்தரவும் இட்டுள்ளது.
மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..!
- Details
- Category: மாணிக்கம்
- Published on Tuesday, 28 May 2013 23:16
- Written by ndpfront
- Hits: 156
தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை தமிழ் மக்களின் உயிர்கள் தொலைக்கப்பட்டது. இதன் போது, புலிமீதான அழிப்பை மட்டும் வல்லாதிக்கர் தனித்து நடந்தியிருந்தால், அது புலியழிப்பு மட்டுந்தான். ஆனால் இவ்வழிவுக்குள் இலங்கையின் ஒரு தேசிய இனம் தொகை மதிப்பின்றி அழிக்கப்பட்டது. அதில், புலிகள் மக்களை யுத்தப் பகுதிக்குள் முடக்கி வைத்திருந்தார்கள் என்பதாகும். ஆனால், அந்தச் சூழலை அரச யுத்தத் தரப்புகளும் தமது யுத்த தந்திரத்தில் அதனையே விரும்பினர்.
More Articles...
- நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்
- மலையகத்திலும் காணி அபகரிப்பு!
- கோமாளித்தனத்தில் கருணாநிதிக்கும் ஹக்கீமுக்கும் கனவித்தியாசம் இல்லை!
- ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - முழுவதும் - எல்லாளன்
- இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 29
- முள்ளிவாய்க்காலும் ஐ.நாவும்
- முள்ளிவாய்க்கால் படுகொலையும், தொடரும் இனவாதமும்
- முள்ளிவாய்க்காலின் தோல்வியும், படிப்பினையும்
- மே-19-ன் நான்காவது ஆண்டில்….
- ஒடுக்கப்பட்ட கரங்கள் மீண்டும் எழும்!
- நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03
- சோசலிசக் கவிதைகள்
- நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02
- கோமாளிகளின் கூடாரமாகவுள்ள வடமாகாணசபைத் தேர்தல்….
- மே தினம் கொண்டாடிய மேதகு பிள்ளையான் வாழ்க!
- பன்னாட்டு நிறுவன இடிபாடுக்குள் மனித உயிர்கள்...!
- நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01
- ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 10 (இறுதிப் பாகம்)
- அரசின் நோக்கத்தை முறியடித்து, முஸ்லிம்களுக்காக குரல் எழுப்புகின்ற சமூக சக்திகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் தரத்தக்க வகையில் பக்க பலமாக இருப்போம்!
- இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02









