சிவன் விடு தூது....... (சிறுகதை)
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 8
- Created: 11 February 2014
- Hits: 1266
எதிர்பாராமல் வந்த பயணம். அப்படி இப்படி என்று ஒரு மாதிரி வெளிக்கிட்டுப் புறப்பட்டு வந்து விட்டேன். மூவாயிரம் அடி உயரத்துக்கு மேலே பிளேன் பறந்து கொண்டிருந்தது. ஏதோ நல்ல காலம், யன்னல் அருகே இடம் கிடைத்ததாலும் எனது பக்கத்தில் யாரும் இல்லாதனாலும் பெரிய வசதியாகவும் ஆறுதலாகவும் இருந்தது. வெளியே எட்டிப்பார்க்கிறேன் எல்லாம் நல்ல வெண்பஞ்சு மேகம். போட்டோ எடுக்கப் பாவிக்கிற லைற்றுக்கள் பூட்டிய மாதிரி நல்ல வெளிச்சம். பார்ப்பதற்கு நல்ல அழகாகவும் ரம்மியமாகவும் இருந்தது. அப்படியே நடந்து போய்க் கொண்டிருக்கிறேன். பஞ்சு மேகங்களுக்குள்ளே மிரிச்சுக் கொண்டு நடக்க சிலவேளை கீழே விழுந்து விடுவேனோ என்று பயந்தாலும், ஏதோ நல்ல மணற்தெருவிலே வெறுங்காலோடு நடப்பது போன்று... நடக்க ஆசையாக இருந்தது.
"பாபப்பட்ட இனத்திற்கு" வழங்கும் பிராயச்சித்தங்கள்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 09 February 2014
- Hits: 2328
தமிழர் பிரதேசங்களுக்கு பாலம் கட்டி றோட்டுப் போட்டாலும், பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைத்தாலும், யாழ்தேவியை காங்கேசன்துறை வரை ஓட வைத்தாலும், அது எம்நாட்டடின் பகுதி ஒன்றிற்கு அரசு செய்யும் சாதாரண நடவடிக்கையல்ல. பாபப்பட்டதோர் இனத்திற்கு செய்யும் பிராயச்சித்த இரட்சக நடவடிக்கைகளாகவே அரச தரப்பால் காட்டப்படுகின்றது.
அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியியல் மற்றும் விவசாய பீடங்களின் ஆரம்ப நிகழ்வுகள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள விவசாய பீட வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை "யாழ்.பல்கலைக்கழகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கு மக்களுக்கு தந்த விலை மதிப்பற்ற சொத்து" எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு இந்துத்துவ நாய் ஊளையிடுகிறது!!!
- Details
- Parent Category: ஆக்கங்கள்
- Category: விஜயகுமாரன்
- Created: 09 February 2014
- Hits: 3359
"அந்த நாயக்கன் அன்று ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலமாக கொண்டு வந்த பொழுதே அவனை செருப்பால் அடித்திருக்க வேண்டும்" என்று தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ராஜா என்ற நாய் குரைத்திருக்கிறது. செய்திருக்கலாம் ஏன் செய்யவில்லை? கிட்டத்தட்ட நூறு வருடங்கள் வாழ்ந்தானே! இப்போது சொல்வதை அவன் உயிருடன் வாழ்ந்த போது செய்து காட்டியிருக்கலாமே. ஈ.வே ராமசாமியின் ஒரு முடியைக் கூட இந்த நாய்களால் தொட்டிருக்க முடியுமா?
வர்க்க வேறுபாடுகள் இல்லாத பொதுவுடமை பொருளாதார அமைப்பு, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி இல்லாத சமுதாயம், பெண்ணடிமைத்தனம் இல்லாத அன்பும், காதலும் சரிசமானமாக களிக்கும் ஆண்கள், பெண்கள், மூட நம்பிக்கைகளை வளர்க்காத கலைகள், இலக்கியங்கள் என்று அவன் சகலத்திலும் மானுடத்தை தூக்கிப் பிடித்தான், அவற்றிற்காக எழுதினான், பேசினான், போராடினான்.
மௌனம் காக்கும் நேரமா? குரலெழுப்பும் நேரமா?
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 07 February 2014
- Hits: 1303
நீறு பூத்த நெருப்பு போல் இந்த அமைதிக்கு உள்ளே மறைந்து கிடக்கும் பல்வேறு சூழ்ச்சிகள் ரகஸியமாகவே வளர்ந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டில் நடக்கும் சிங்கள எதிர்ப்பும், இலங்கையில் சிங்கள மக்கள மத்தியில் நிலவும் தமிழ், முஸ்லிம் எதிர்ப்பும் அமைதியாக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது.
எதிர்காலத்தில் பெரியதொரு பேரழிவை ஏற்படுத்தக் கூடிய விதத்தில் இது கொழுந்து விட்டு எரிய கூடிய ஆபத்தும் அந்த அமைதிக்குள் இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினையிலுள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இது குறித்து காக்கப்படும் அமைதிதான். அரசாங்கம் தனது அரசியல் சூதாட்டத்திற்காக இந்த சூழ்ச்சிகளை உரமிட்டு வளர்த்து வருவது தெரிகிறது. இந்த நிலைமையில் எதிர்க்கட்சிகள் இஞ்சி தின்ற குரங்குகளைப் போல் செய்வதறியாது நிலை தடுமாறிப் போயிருக்கின்றன.
1971, மகத்தான தோல்வி சமூகத்திற்கு விட்டுச் சென்ற கற்பிதங்கள்
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 4
- Created: 07 February 2014
- Hits: 1427
1971 ஏப்ரல்மாதம் 4ம் திகதி. பிற்பகல் 2.00 மணியிலிருந்து இலங்கை வானொலி நிகழ்ச்சிகளுக்கு இடையே ஒரு அறிவித்தல அடிக்கடி வெளியிடப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறியது. இந்நாட்டு மக்கள் என்றுமே எதிர்பார்த்திராத செய்தி அது. என்ன நடக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை. "நாட்டில் சட்டபூர்வமான அரசாங்கத்தை கவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடிப்பதற்காக பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் பொலிஸ் நிலையங்களை தாக்கி அந்த பிரதேசங்களில் நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக போரடி வருகிறது. அவர்களை முறியடிக்க அரசாங்கம் தன்னாலான அனைத்தையும் செய்ய தயாரக உள்ளதாக" அந்த செய்தி மேலும் கூறியது.
என்ன தண்டனை..?
கபடம் செய்யும் காகக் கூட்டத்திற்கு
புறங்கையால் கொடுக்கின்ற மதிப்புக் கூட
தனை வருத்தி உழைக்கின்ற
அன்றாடங் காச்சி மனிதருக்கு
இல்லையே..! என்பதையும் விட..,
கட்டாய இராணுவ பயிற்சி- நாளை உங்கள் பிள்ளையும் பலியாகலாம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 February 2014
- Hits: 2342
பல்கலைக்கழத்திற்கு தகுதிபெறும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கட்டாய இராணுவ பயற்சியின்போது லஹிரு சந்தருவன் என்ற பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளார். அடுத்த பலி உங்கள் பிள்ளையாகவும் இருக்கலாமென அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கிறது. ஆகவே இதற்கு எதிராக ஒட்டுமொத்த சமுதாயமும் அணிதிரள வேணடுமென ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ பண்டார வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென "மகிந்தப்" பள்ளுப் பாடுவோமே!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 February 2014
- Hits: 2477
எம் நாட்டடின் 66-வது சுதந்திர தினத்தில் எம் நாட்டு மக்கள் சகல "சௌபாக்கியங்களுடனும் வாழ்கின்றார்கள்" என சுதந்திரப் பள்ளு பாடலாம்.
சுதந்திரத்தின் பின்னான காலனியம்-நவகாலனியம் போன்றவற்றின் தொடரான நவதாராளமய பொருளியல் மகிநத குடும்பத்திற்கும் அதன் சொந்த பந்த உறவுகளுக்குமான மயமாகியுள்ளது. நாட்டின் அதியுயர் பெருவளங்களையும்-பெருவருமானங்களையும் ஈட்டக்கூடிய அத்தனை துறைகளும் இக்குடும்ப மந்திரிகளின் மயமாகவே உள்ளது. இது 300-ற்கு மேற்பட்ட குடும்ப உறவுகளின் கூடாரமாகியுள்ளது.
உரையும் உரையாடலும்: சமாதானத்திற்கான கனேடியர்கள்
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 03 February 2014
- Hits: 2138
தமிழ் பேசும் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்றவேண்டிய பணிகளும்
சிறப்புப்பேச்சாளர்: கலாநிதிசிவச்சந்திரன்
முஸ்லிம் மக்களின் இன்றைய அரசியல், பொருளாதார நிலையும் எதிர் காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகளும்.
சிறப்புப்பேச்சாளர்: கல்பிகா
ஊடகவியலாளர் மெல் குணசேகர குத்திக் கொலை
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 February 2014
- Hits: 2304
மெல் குணசேகர இலங்கையின் முன்னணி பெண் ஊடகவியலாளரான மெல் குணசேகர குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
மெல் குணசேகரவின் சடலம் கூரிய ஆயுதமொன்றால் குத்தப்பட்ட காயங்களுடன் கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்காலத்தில் ஏஎஃப்பி செய்திச் சேவைக்காக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பிலிருந்து பணியாற்றினார்.