கனவிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுபடுவதானால்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 March 2014
- Hits: 2110
உலகம், நாங்கள், வாழ்க்கை இவை அனைத்தும் அடிக்கடி மாறுகிறது. இம் மாற்றங்களை கவனத்தில் கொண்டு, அதன் பின்னணியில் காணப்படும் உண்மையை விளங்கி கொள்ளாமல் வாழுகின்ற 'தார்மீகமற்ற உலகத்தில்" பெண்கள் என்ற வகையில் சாதிக்க வேண்டும் என நினைப்பதற்க்குப் பதிலாக, சாதிப்பதற்க்கான காலம் எழுந்துள்ளது. பெண்கள் என்ற வகையில் இந்த சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் உண்மையில் எமக்கு வாழ்க்கை இருந்ததா? பல நுற்றாண்டுகால வரலாற்றில், பெண்கள் என்ற வகையில் நாம் சமூகத்திற்கு சமமான சேவையை வளங்கியிருந்தாலும் இதுவரையில் அதற்க்குரிய பெறுமதி எமக்கு கிடைக்கவில்லை. இந்நிலைமையை முழுசமூகமும் சாதாரணமானதாக கருதியிருக்கலாம் ஏனெனில் நாம் பெண்கள் என்பதிலாகும்.
சமவுரிமை இயக்கம் ஒரு வெகுஜன இயக்கமே!
- Details
- Parent Category: தோழமை அமைப்புகள்
- Category: சமவுரிமை இயக்கம்
- Created: 07 March 2014
- Hits: 816
வெகுஜன இயக்கங்களின் அடிப்படை என்பது, ஒடுக்கப்பட்ட பல்வேறு வர்க்கங்களின் முரணற்ற பொதுக்கோரிக்கையை இணைக்கும் பொதுத்தளம். இது பரந்துபட்ட வெகுஜனங்கள் பங்கு கொள்ளக் கூடிய, சமூக இயக்கத்துக்கு வழிகாட்டுகின்றது. இதில் பல்வேறு கட்சிகள், சமூக இயக்கங்கங்கள் கூட முரணற்ற (இந்த) ஜனநாயகக் கோரிக்கைளுடன், தங்களை இணைத்துக் கொண்டு போராடுவதற்கான வெளியும் கூட.
அதேநேரம் அவ் வெகுஜன இயக்கத்தில் பங்கு கொள்ளும் ஒரு கட்சி கொண்டிருக்கக் கூடிய அரசியல் நிலைப்பாடுகளை உள் நுழைப்பது அல்லது அதன் அடிப்படையில் வெகுஜன அமைப்புடன் முரண்படுவது, வெகுஜன இயக்க செயற்பாட்டையும் அதன் நோக்கத்தை அழிக்கின்ற அரசியல் முன்முயற்சியாகவே இருக்கும். ஒரு கட்சி கொண்டு இருக்கக் கூடிய உயர்ந்தபட்சத் திட்டங்களை, வெகுஜன இயக்கத்தில் தேடுவதும், அதன் அடிப்படையில் இந்த வெகுஜன இயக்கத்தை கேள்விக்கு உள்ளாக்குவதும் வெகுஜன இயக்கத்தின் அவசியத்தை மறுப்பதும், அந்த அரசியல் செயற்பாட்டை இல்லாதாக்குகின்ற அரசியல் முயற்சியுமாகும.
மின்சார நாற்காலிக்கு வந்துள்ள மவுசு! மரணத்திற்கு அடம் பிடிப்பவனும் நம்நாட்டில்தான்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 07 March 2014
- Hits: 1931
ஜெனீவாவில் மகிந்தாவிற்கு வழங்கப்பட்டுள்ள "அமெரிக்க நன்கொடையால்" அரச தரப்பு அளிவில்லா ஆனந்தத்தில் உள்ளது. ஐ.நா.வில் தர்மிஸ்டன் அறிக்கை, நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணையுடன் கூடிய இன்னோரன்னவெல்லாம் இயலாமையின் பாற்பட்டு, கிடப்பில் போடப்படவுள்ளன. தவிரவும் தான் குற்றவாளியானால் தனக்கு மின்சார நாற்காலிதான் என கூறிவரும் மகிந்தாவை சரத் பொன்சேக விஞ்சுகின்றார்.
"போர்க்குற்றங்கள் தொடர்பாக எவரேனும் மின்சார நாற்காலியில் அமர்த்தப்படும் நிலை ஏற்பட்டால் அது நானாகவே இருக்கும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அங்கு பணியாற்றிய தளபதிகளே பொறுப்புக்கூறக் கூடியவர்கள். கொழும்பில் அமர்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் யுத்த களத்திற்கு பொறுப்பு சொல்ல முடியாது. போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து மின்சார நாற்காலியில் அமர வைத்து தண்டிக்கப்பட்டால் அந்தத் தண்டனை எனக்கே விதிக்கப்பட வேண்டும்."
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32
- Details
- Parent Category: கட்டுரைகள்
- Category: இரயாகரன்
- Created: 05 March 2014
- Hits: 2802
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 32
பாட்டளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் போராட்டத்தில், ஸ்டாலின் இழைத்த தவறுகள் என்ன? ஏன்? எப்படி இழைக்கப்பட்டது?
ஸ்டாலின் பற்றிய மார்க்சிய ஆய்வுகள் எப்போதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பாதுகாக்க நடத்திய வர்க்கப் போராட்ட திசையில் பகுத்தாய்வு செய்கின்றது. ஆனால் இடதுசாரி பெயரிலும், புத்தக புத்திஜீவிகள் பெயரிலும் மார்க்சியமல்லாத நடைமுறையில் இருந்து, மார்க்சியத்தின் பெயரில் வெளிவரும் கருத்துகள், மார்க்சியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் ஒரு இடை நிற்றல் ஊடாக கண்டறியும் நடுவழிப் பாதை வழியாக ஸ்டாலினை கொச்சைப்படுத்துகின்றன. சர்வதேச மனிதஉரிமை அமைப்பின் கோட்பாட்டு நிலையில் ஜனநாயகத்தையும், வன்முறையையும், சர்வாதிகாரத்தையும் கோட்பாட்டளவில் வகுத்துக் கொள்ளும் இவர்கள், ஸ்டாலின் இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நடக்கும் என்கின்றனர். பின்தங்கிய நாட்டின் குறிப்பான நிலை, விவசாய குணாம்சம், ஸ்டாலினின் முரட்டுக் குணம், ஜனநாயகத்தை ஏற்காதன் விளைவு, மேற்கு நாட்டு ஜனநாயகத் தன்மையை புரிந்து கொள்ளாத சமூகத்தின் குறைபாடான குணாம்சம், சோசலிசத்தை வன்முறையூடாக கட்டும் கோட்பாடு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொண்டு தனி ஒரு கட்சியாக உருவான ஜனநாயகமற்ற போக்கு, ஆரம்பம் முதலே லெனின் தலைமையில் வன்முறையை அடிப்படையாக கொண்டமையும், சோவியத்தின் புரட்சிக்கு மேற்கு நாடுகளின் புரட்சி உதவாமை என பல காரணத்தைச் சொல்லி, ஸ்டாலினை மறுப்பதில் காலத்தை ஒட்டி, அவதூறுகளை பரப்புகின்றனர்.
தேர்தல் அரசியல் தொடர்பாக கலந்துரையாடல் ஆரம்பம்!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 March 2014
- Hits: 1905
மாகாணசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் மேல் மற்றும் தென் மாகாண மாவட்டங்களில் கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடாத்த முன்னிலை சோஸலிஸக் கட்சி தீர்மானித்துள்ளது.
பிரேமச்சந்திர அண்ணாச்சி… நீங்கள் சொல்வது எப்போ "உண்மையாச்சு"?
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 05 March 2014
- Hits: 2232
"தமிழீழ விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்த சந்தர்ப்பங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளைப் பொறுத்தவரையில் பொதுமக்களை மிரட்டிய குற்றச்சாட்டுக்களை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதனை நாம் மறுக்கவுமில்லை. ஆனால் ஒரு போதும் பொதுமக்களை அவர்கள் கொலை செய்தார்கள் என கேள்விப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்ததுமில்லை"
சிறுகதையா...........? தொடர்கதையா.......? (சிறுகதை)
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 04 March 2014
- Hits: 2188
கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது.
சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான்.
வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு.
அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான்.
ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது.
மாணவர்-தொழிலாளரின் கூட்டிணைவே இலவசக் கல்வியை வென்றெடுக்கும்!
- Details
- Parent Category: போராட்டம் பத்திரிகை
- Category: இதழ் 5
- Created: 02 March 2014
- Hits: 1285
தம் மழழை செல்வங்களை நினைத்தப்படி வைத்தியர்களாகவோ பொறியியலாளர்களாகவோ ஆக்கிட முடியாவிடினும் கனவேனும் காணக் கூடியதாகவுள்ளது. குறைந்த பட்ச கல்வி அறிவையேனும் பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் கல்வி இலவசமாக கிடைப்பதாகும். ஆனால் தொடர்ந்து நிலைமை இப்படியே இருக்க போவதில்லை. அரசு இது வரை இலவசமாக வழங்கி வந்த கல்வியை மெல்ல மெல்ல தனியார் கைகளில் ஒப்படைத்து வருகின்றது. எதிர் காலத்தில் பெற்றோர்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றதோ அந்தளவிற்கு தான் பிள்ளைகள் கல்வி கற்க முடியும்என்ற நிலை உருவாகி வருகின்றது.
இந்த வாரச் செய்திகளின் சாரம்...
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 02 March 2014
- Hits: 2030
சர்வதேச விசாரணை இல்லாத பிரேரணையே ஜெனிவாவில்!
"ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் உள்ளடங்காது என்றும் சுயாதீன விசாரணை என்ற விடயம் மட்டுமே இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.!"
கிளிஞ்சுது போங்க! சர்வதேச விசாரணை, மகிந்தாவுக்கு தூக்கு என்று தானே உங்கை எல்லாரும் குத்தி முறியுறாங்க. நீங்கள் என்னன்டா இப்பிடிப் போடுறியள். சர்வதேச விசாரணை சர்வஜன வாக்கெடுப்பு, தமிழ்ஈழம் எனப் புறப்பட்டுள்ள "தமிழகத்தின் உணர்வுகளிலும் மேலான உணர்வுகளுக்கு" வயித்திலை புளியைக் கரைத்து விட்டீர்களே! ஜெனீவா என்றால் இப்பிடிதான் என்று சொன்னால் சொல்லுறவர்களையும் துரோகிகள் என்று சொல்லுறவர்களும் விளங்கிக் கொண்டால் சரியுங்க.
தமிழகத்தில் உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு ரத்தக் கொதிப்பு!
- Details
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
- Created: 28 February 2014
- Hits: 2125
ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸாரைக் கண்டித்து சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் மற்றும் "தமிழர் முன்னேற்றப் படையினர்" நேற்று நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் உடன் பிறப்புகளுக்கோ, இரத்தத்தின் இரத்தங்களுக்கோ உயிராபத்தோ, சிறுகாயமோ ஏற்படவில்லை.