Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிய மாற்றீடு!

ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் மீட்பர்கள் என கூறிக் கொள்ளும் பலர் தேர்தலுக்கு முன்வருகிறார்கள். ஒரு புறம் மஹிந்த ராஜபக்ஷ, இன்னொரு புறம் மைத்திரிபால சிறிசேன. இதற்கிடையில் முன்னிலை சோஷலிஸக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி, இலங்கை சோஷலிஸக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட இடதுசாரிய முன்னணியின் பொது வேட்பாளராக தோழர் துமிந்த நாகமுவ இடதுசாரிய மாற்றீடுக்காக போட்டியிட முன்வந்துள்ளார்.

Read more ...

முகம் மாற்றத்திற்கு பதிலாக முறைமாற்றம்! துமிந்த நாகமுவ

அரசாங்கத்திற்குள்ளும் வெளியிலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை பற்றிப்பேசப்படுகின்றது. ஒரு சாரார் அதை நீக்க வேண்டும் என்றும், இன்னொரு சாரார் அதை பாதுகாக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.ஆனால் இடதுசாரிய முன்னணியாகிய எங்களுக்கு இது சம்பந்தமாக கருத்துக் கிடையாது. நாங்கள் இந்த முறைமையை மாற்ற வேண்டும் என்று சொல்கின்றோம்.

Read more ...

முள்ளிவாய்க்காலும் அபகரிக்கப்படப்போகிறது!

பெரும் போர் முடிந்து அழிவுகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் இன்று மெல்ல மெல்ல நிசப்தத்திலிருந்து மீளத்தொடங்கியிருக்கிறது. பரந்தன் சந்தியிலிருந்து முல்லைத்தீவு செல்லும் ஏ35 வீதி புழுதியால் நிறைந்து கிடக்கிறது. இடைவிடாமல் செல்லும் கனரக வாகனங்கள் ஒருபுறம், தென்பகுதியிலிருந்து முள்ளி வாய்க்காலைப் பார்க்கச் செல்வோர் ஒருபுறம், புதுக்குடியிருப்புச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்க்கச் செல்வோரென ஏ35 வீதி தினமும் பரபரப்பாக இருக்கிறது.

ஆளரவமற்று உடைந்து சிதைந்து கிடக்கும் வீடுகள், எரித்தும் வெட்டப்பட்டும் தலையற்றுக் கிடக்கும்பனை மரங்கள், இடிபாடுகளைச் சுமந்து நிற்கும் சந்தை மற்றும் பாடசாலைக் கட்டிடங்கள், எரித்தும் நொறுக்கியும் குவிக்கப்பட்டு குவியல்களாய்க் கிடக்கும் பல்வேறு வகைப்பட்ட வாகனங்கள், தகர்ந்தும் எரிந்தும் தூர்ந்துபோய்க்கிடக்கும் பங்கர்கள், பத்து மீற்றர் இடைவெளியில் நிற்கும் படையினர் என மரணங்களால் மலிந்த நிலம் மனிதப்பேரவலத்தின் நினைவுகளை தற்பொழுதும் நினைவூட்டியவாறு காட்சியளிக்கிறது.

Read more ...