Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் பல்கலைக்கழகத்தில் இனவாதத்தை தூண்டும் முயற்சியை வன்மையாக கண்டிப்போம் - IUSF

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அடிதடி காரணமாக, பல்வேறு தரப்பினர் இனவாதத்தைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகரவின் கையொப்பத்திலான அவ் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

"சிங்கள-தமிழ் மாணவர் தொடர்பிலான முதலாம் வருட வரவேற்பு விருந்துபசாரத்தின் போது, கலாசார நிகழ்வு பயன்படுத்தியமைக்காக இரு சாராரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கலாசார நிகழ்வு ஒன்றுக்காக இரு பிரிவாக பிரிந்து சண்டையிட்டு கொள்வதை நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

Read more ...

"மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து" - போராட்டம் (படங்கள்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் "கல்வி விற்பனையை நிறுத்து", "உடனடியாக மாலபே போலி பட்டக் கடையை மூடு", "மாணவர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து".. ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேற்றும் இன்றும் (13-14/07/2016) தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Read more ...

ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?

"ஜனநாயகம்" என்ற வார்த்தை பெரும்பாலானோருக்கு புதிய வார்த்தையல்ல. கடந்த தேர்தல்களின்போது ஜனநாயகம் குறித்த பல்வேறு பகுப்பாய்வுகள், வாக்குறுதிகள், மற்றும் விமர்சனங்கள் அரசியல் மேடைகளிலெல்லாம் முழங்கின. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும்  ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினை பிரதான முழக்கமாக இருந்தது. கடந்த அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுள் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தே இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது. அதேபோன்று, வெள்ளை வான் கலாச்சாரம், காணமலாக்கல், கடத்தல், கொலை, அரசியல் பழிவாங்கல், ஊடக அடக்குமுறை போன்றவற்றால் இன்னல்களுக்குள்ளாக்கப்பட்ட சமூக ஜனநாயகம் சம்பந்தமான அபிலாஷைகளை பயன்படுத்தி புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பதினெட்டு மாதங்களின் பின்பு இன்று என்ன நடக்கின்றது? ஜனநாயகம் சம்பந்தமாக கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளனவா அல்லது ஜனநாயகம் மேலும் ஆபத்தில் வீழ்ந்துள்ளதா? அது குறித்து அறிந்து கொள்ள பகுத்தறிவை பயன்படுத்துங்கள் என நாம் உங்களை அழைக்கின்றோம்.

Read more ...

யாழில் ஜனநாயகத்திற்கான அமைப்பினர் துண்டுப்பிரசுர விநியோகம் (படங்கள்)

இன்று (23/6/2016) யாழ்ப்பாணத்தில் மாணவ அமைப்புக்கள், ஆசிரிய சங்கங்கள், இடதுசாரிய கட்சிகள், கலைஞர்கள் புத்திசீவிகள், தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கும் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதற்க்காக உருவான போராட்ட அமைப்பினர் பரவலாக துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர். யாழ் நகரத்தில் பொதுச்சந்தை, விற்பனை நிலையங்கள், பஸ் நிலையம் போன்ற பல இடங்களில்  "ஜனநாயகம் எமக்கு பொருந்துமா?" என்ற தலைப்பிட்ட துண்டுப்பிரசுரத்தினை பரவலாக விநியோகித்தனர்.

Read more ...

ஜனநாயகத்திற்கான ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்தரங்கு (படங்கள்)

ஜனநாயகத்துக்கான ஆர்பாட்டக்காரர்களின் முதலாவது கருத்தரங்கு  இன்று (30.06.2016)  கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்வில்  புதிய ஜனநாயக மார்க்சிய லெனிய கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோஷலிஸக் கட்சி உட்பட பல இடதுசாரி கட்சிகளுடன் அனைத்துப் பல்கலைகழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் ,ஆசிரிய சங்கங்கள் உட்பட கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Read more ...