Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

முஸ்லிம் அரசியல்வாதிகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க முடியாது!- முன்னிலை சோசலிச கட்சி

நாட்டிற்குள் தற்போது நடக்கும் வன்முறைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சம்பிரதாய முஸ்லிம் அரசியல்வாதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் உலாமாக்கள் சபையினால் தீர்க்க முடியாது என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

மருதானை சீ.எஸ்.ஆர். மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில்,

 

Read more ...

மாணவர் நடை பயண பேரணி மீது நடாத்திய காட்டுமிராண்டித்தன தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!

சைட்டம் திருட்டு பட்டக்கடையை ரத்து செய்யுமாறும், கல்வியை தனியார்மயப்படுதலை நிறுத்துமாறும், பல்கலைக்கழக அனுமதியை அதிகரிக்குமாறும் வற்புறுத்தும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடைபயண பேரணி மீது மிலேச்ச காட்டுமிராண்டித்தன தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்.

சைட்டம் திருட்டு பட்டக்கடையை தடை செய்ய வற்புறுத்தி வருடக்கணக்கில் மாணவர் இயக்கங்கள், உழைக்கும் மக்கள் உட்பட பொதுமக்கள் அரசை வற்புறுத்தி வந்தாலும் முன்பிருந்த அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் மக்களின் கருத்தை உதாசீனப்படுத்தி செயற்பட்டுவருகிறது. 

Read more ...

மேதின கூட்டம் - முன்னிலை சோசலிச கட்சி (படங்கள்)

இன்று மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம், முன்னிலை சோசலிக கட்சியால் கொழும்பு புறக்கோட்டையில் மாபெரும் எழுச்சிக் கூட்டமாக நிகழ்த்தப்பட்டது. மேலும் இத்தாலி, பரிஸ் மற்றும் லண்டன் நகரங்களில் சமவுரிமை இயக்கமும் முன்னிலை சோசலிச கட்சியும் இணைந்து மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்டன. "ஏகாதிபத்திய நவதாராளமய திட்டத்திற்கு எதிராக உழைக்கும் மக்களே எழுவீர்!" என்ற கோசத்தை பிரதான முழக்கமாக இந்த வருட சர்வதேச தொழிலாளர் தினத்தில் முன்வைத்து   முன்னிலை சோசலிச கட்சி இந்த எழுச்சி கூட்டங்களை நடத்தியதுடன், இதே கோசத்துடன் சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற ஊர்வலங்களிலும் கலந்து கொண்டிருந்தது. 

Read more ...

உண்மையான ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இடதுசாரிய இயக்கங்களை பலப்படுத்த வேண்டும்- குமார் குணரத்தினம்

கடந்த மே 1ம் திகதி கொழும்பு புறக்கோட்டையில் இடம்டபெற்ற சர்வதேச தொழிலானர் தின கூட்டத்தில் முன்னிலை சோசலிச கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரத்தினம் ஆற்றிய உரையின் சாரம்சம் இது.

131 வருடங்களுக்கு முன் உழைக்கும் மக்கள் 8 மணித்தியால வேலை நாள் கேட்டு போராடினார்கள். 131 வருடங்களுக்கு பின் இன்று 10,12 மணித்தியால வேலை செய்ய கேட்கின்றனர். இரண்டு மூன்று தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

ஒப்பந்த, மேன்பவர், சமயாசமய முறைமைகளில் சுரண்டல் அதிகரித்துள்ளது. 8 மணித்தியால வேலையினால் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதுள்ளது. எடுக்கும் சம்பளம் போதுமானதாக இல்லை. பாடசாலைகளில்  2ம்  3ம் வகுப்புகளில் இருந்தே எதிர்கால உழைப்புக்கு தயாராக வேண்டியுள்ளது.

Read more ...

இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை உடன் நிறுத்து!

சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர் தலைவர்களை உடன் விடுதலை செய்!

இந்தியாவில் அமைந்துள்ள ஜப்பான் நிறுவனமான மாருதி–சுசுகி ஆலையின் தொழிற்சங்க செயற்பாட்டாளர்களுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கும் நாம், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு இந்திய ஆட்சியாளர்களை வலியுறுத்துகின்றோம். 2012ல் இந்தியாவின் புதுடில்லி நகரை அண்மித்த ஹரியானா மாநிலத்தில் மனேசார் மாருதி சுசுகி மோட்டார் கார்களை பொருத்தும் ஆலையில் நடந்த தொழிலாளர் போராட்டத்தின்போது, அந்நிறுவனத்தின் மனிதவள முகாமையாளரொருவரின் இறப்பு சம்பந்தமாக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் 18ம் திகதி வழங்கப்பட்டது. அதன்படி 13 தொழிலாளர்களுக்கு ஆயுள்தண்டனையும், 4 பேருக்கு 5 ஆண்டுகளும், 14 பேருக்கு 3 வருடங்களும் என தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 12 பேர் மாருதி சுசுகி தொழிற்சங்கத் தலைவர்களாவர்.

Read more ...