முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு அறிவிப்பு
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
04 Jan 2017
- Hits: 846
முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டாவது தேசிய மாநாடு, எதிர்வரும் மாசி மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. "ஏகாதிபத்திய -நவதாராளவாத பொருளாதரத்துக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு கட்சி!" என்ற கருப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவிருக்கின்றது. இன்று கொழும்பில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சேனாதிர குணதிலக தலைமையில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாநாடு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை கண்டிப்போம்!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
11 Dec 2016
- Hits: 820
நேற்றுக் காலையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த துறைமுக ஊழியர்கள் கடற்படை தளபதியின் தலையீட்டுடன் தாக்கப்பட்டுள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவமானது அரசாங்கத்தின் தேவைக்காக அரசாங்கமும் அறிந்த நிலையில் நடந்துள்ளது தெரிகின்றது. அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட 15000 ஏக்கர் காணி விற்கப்படுவதற்கும், துறைமுகத்தை தனியார்மயப்படுத்துவதற்கும் எதிராகவும், தமது தொழில் பாதுகாப்பு ஒழிக்கப்படுவதற்கு எதிராகவும் துறைமுக ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
"வரலாறு பூராவும் நாங்கள் மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம்": குமார் குணரத்தினம்
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
02 Dec 2016
- Hits: 1316
விசா காலாவதியான நிலையில் நாட்டில் தங்கியிருந்தாக கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் தோழர் குமார் குணரத்தினம் இன்று விடுதலை செய்யப்பட்டார். 2015 நவம்பர் 4ம் திகதி கைது செய்யப்பட்ட அவருக்கு கேகாலை நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்திருந்தது. இன்று விடுதலையடைந்த தோழர் குமார்; குணரத்தினத்தை அழைத்து வருவதற்காக பெருந்தொகையான முன்னிலை சோஷலிஸக் கட்சித் தோழர்கள் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்தனர்.
என்னை நாட்டைவிட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் – குமார் குணரட்னம்
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
03 Dec 2016
- Hits: 807
தன்னை நாட்டை விட்டு வெளியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருந்தது என கூறிய முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் எனி்னும் தற்போது இந்த விடயம் முடியாமல் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு வருட சிறைத்தண்டனையின் பின்னர் நேற்றைய தினம் விடுதலையான குமார் குணரட்னம் இன்று (03/12/2016) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
குமார் குணரத்தினம் விடுதலை (படங்கள்)
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
02 Dec 2016
- Hits: 1679
முன்னிலை சோசலிசக் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் குமார் குணரத்தினம் இன்று பகல் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவரை வரவேற்றக கட்சி உறுப்பினர்கள், ஜனநாயகவாதிகள், சிவில் சமூகங்களை சேர்ந்தவர்கள் என ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடியிருந்தனர். வெளியில் வந்த அவரை அங்கிருந்தோர் கட்டித் தழுவிக் கொண்டனர். அதனை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர் மத்தியில் அவர் உரையாற்றினார்.