"போராட்டத்தில் உயிரிழந்த மாவீரர்களிற்கு மரியாதை செலுத்தி வணங்கும் உரிமை பல்கலைக்கழக மாணவர்களிற்கு உண்டு" என முன்னிலை சோஷலிச கட்சி அறிக்கை.
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
02 Dec 2012
- Hits: 832
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு 24 மணிநேரம் ஆனபோதும் அவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என முன்னிலை சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.
அக்கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு 24 மணித்துயாலத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்பது சட்டம் எனவும், ஆனால் இம் மாணவர்கள் இதுவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவில்லை என அக்கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் லண்டன் கூட்ட செய்தி (படங்கள் இணைப்பு)
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
08 Oct 2012
- Hits: 1060
நேற்று லண்டனில் முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரித்தானியக் கிளையின் பகிரங்க கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் முன்னிலை சோசலிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குமார் குணரட்ணம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
தோழர் குமார் "இன்று என்ன செய்யப்பட வேண்டும்" என்னும் தலைப்பில் உரையாற்றியதுடன் சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் இன ஐக்கியத்தையும் வலியுறுத்தினார். கூட்டத்தின் இறுதியில் கேள்வி நேரத்தில் இரண்டும் முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் இன்று அதிகாலை இராணுவத்தினரால் கடத்தல்!
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
21 May 2012
- Hits: 793
முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற இராணுவத்தினர், கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளனர்.
இன்று அதிகாலை 5மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இராணுவத்தினர், சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளை பறித்துச் சென்றுள்ளனர்.அவ் உறுப்பினர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.
அனைவருக்கும் இலவசக் கல்வியை வழங்கு - முன்னிலை சோசலிச கட்சி
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
16 Aug 2012
- Hits: 958
அனைவருக்கும் இலவசக்கல்வியை வழங்கு என்ற கோசங்களுடன் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்னிலை சோசலிச கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் அடங்கிய கோசங்கள் இப்படி இருந்தன.
இராணுவத்தினரால் கடத்தப்பட்ட நான், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்: பிரேம்குமார் குணரட்ணம்
- Details
- Category: முன்னிலை சோஷலிஸக் கட்சி
-
11 Apr 2012
- Hits: 864
தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.