Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி இன்று (28.05.2015) கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி இன்று 28/05/2015 பிற்பகல் 3:30 மணிக்கு, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் நிகழ இருக்கின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தினை சமவுரிமை இயக்கம் ஒழுங்கு செய்திருக்கிறது.

Read more ...

வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளின் குடும்பத்தினருடன் சமவுரிமை இயக்கம் கலந்துரையாடல்

சமவுரிமை இயக்கத்தின் அமைப்பாளர் யூட் பேர்ணான்டோ புள்ளே மற்றும் தோழர் கிருபாகரன் ஆகியோர் நேற்றைய தினம் (16-05-2015) வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து உரையாடல் ஒன்றினை நடாத்தியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கமானது பல வருடங்களாக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாடு தளுவிய பாரிய போராட்டங்களை முன்னெப்பதே.

Read more ...

கிழக்கு பிராந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் சாந்தன் கண்ணப்பனுடன் நேர்காணல் (ஒலி இணைப்பு)

அண்மையில் திருமலையில் நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களினால் போராட்டம் ஒன்று இரு நாட்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் திருமலை நகரசபைக்கு எதிராக நகர சுத்தி தொழிலாளர்கள் மீதான சாதிய ரீதியான பாகுபாடு மற்றும் அடக்குமுறை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டது.

Read more ...

இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!

கனடா சமஉரிமை இயக்கத்தினரால், "இஸ்லாமிய அச்சக்கோளாறு! இஸ்லாமிய எதிர்ப்புணர்வு!" எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று ஸ்காபரோ சிவிக் சென்ரறில் கடந்த 7ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வின்சர் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையில் விரிவுரையாளராக இருக்கும் பாதிமா காதர், சைலான் முஸ்லீம் ஒழுங்கமைப்பின் பிரதிநிதித் தலைவர் சமீம் முகம்மட், கலாநிதி சுல்பிகா இஸ்மாயில் ஆகியோர் இதில் உரையாற்றினர்.

Read more ...

இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்

எதிர்வரும் சனிக்கிழமை (07/03/2015) அன்று  கனடா ஸ்காபரோ சிவிக் சென்றரில்  "இஸ்லாமிய அச்சக்கோளாறும், இஸ்லாமிய எதிர்ப்புணர்வும்" என்னும் தலைப்பில் உரையும், கலந்துரையாடலும் மாலை 4 மணிக்கு இடம்பெற இருக்கின்றது.

Read more ...

டென்மார்க்கில் நடந்த சம உரிமை இயக்கத்தின் இலக்கை நோக்கி "வசந்தத்தை தேடுகிறோம்" விழா

15.11.2014 சனி அன்று, டென்மார்க்கின் கொல்ஸ்ரப்புறோ நகரில் சம உரிமை இயக்கத்தின் "வசந்தத்தை தேடுகிறோம்" விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சம உரிமை இயக்கத்தின் செயல் வடிவமான இனவாதம் - மதவாதம் - குலவாதம் என்ற சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகளும், நிகழ்வுகளும் மக்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டன.

Read more ...

புதிய அரசிடம் சமவுரிமை இயக்கத்தின் கோரிக்கைகள்

சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை

22.01.2015 இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன், எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

Read more ...

கலந்துரையாடல்: இலங்கை அரசியலில் சமவுரிமைக்கான போராட்டமும் இடதுசாரிகளின் நிலைப்பாடும்

இந்த கலந்துரையாடலில் பல முக்கிய தோழர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காலம்:   9.11.014 (ஞாயிறு)

இடம்:    Roswiesen str-16. 8051- Zürich.

மணி:    பிற்பகல் இரண்டு ( 14.00)

Read more ...