Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

லண்டனில் ஆர்ப்பாட்டம்: சமவுரிமை இயக்கம் அழைப்பு

எதிர்வரும் சனிக்கிழமை 23/04/2016 அன்று பிற்பகல் 3 மணி முதல் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்னால் உள்ள வெஸ்ட்மினிஸ்ரர் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு சமவுரிமை இயக்கம் அழைப்பு விடுக்கின்றது. இலங்கையில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை, குமார் குணரத்தினத்தின் விடுதலை – பிரஜாவுரிமை – அரசியல் செய்வதற்க்கான உரிமை மற்றும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள குடியேற்றுமாறு வலியுறுத்தியும் நிலப்பறிப்பினை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி என்ற பதாகைக்கு கீழ் ஜனநாயக மறுப்பு ஆட்சிபுரியும் ரணில் - மைத்திரி அரசுக்கு எதிராக ஒன்றுபட்ட எதிர்ப்பை காட்ட அனைவரும் அணிதிரள்வோம்.