Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"அரசியல் கைதிகளை விடுதலை செய்": சமவுரிமை இயக்கத்தினர் அவுஸ்திரேலியாவில் போராட்டம் (படங்கள்)

நேற்றைய தினம்  சனிக்கிழமை 27/06/2015 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் உள்ள பெடரேசன் சதுக்கத்தில. "அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" என இலங்கை அரசை நிர்ப்பந்திக்கும் போராட்டத்தினை சமவுரிமை இயக்கத்தின் உறுப்பினர்கள் முன்னெடுத்திருந்தனர்.

சமவுரிமை இயக்கம் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தினை தொடர்ச்சியாக இலங்கை முதல் புலம்பெயர்ந்த நாடுகள் வரை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அண்மையில் பிரான்ஸ் மற்றும்  லண்டனில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்தில் அவுஸ்திரேலிய இடதுசாரிகள் பங்கு பற்றியதுடன் தமது ஆதரவினையும் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.