Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

"மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்" கையெழுத்து போராட்டம் கண்டியில்... (படங்கள்)

சமவுரிமை இயக்கம் "மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம்!" என்னும் கருப்பொருளுடன் கூடிய இன - மத வாதத்துக்கு எதிரான வேலைத்திட்டத்தை நாடுமுழுவதும் முன்னெடுத்து வருகிறது. இப்பிரச்சார வேலைதிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜூலை 3அன்று, கொழும்பில் நடைபெற்றது .

அதன் தொடர்ச்சியாக நேற்று (5/7/14) கண்டியில் சமவுரிமை இயக்கத்தினால், இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான மக்கள் விழிப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் மக்கள் இனவாதம் மதவாதத்திற்கு எதிராக தமது கண்டனங்களை அங்கு வைத்திருந்த பாரிய பதாகைகளில் கையொப்பங்களை இட்டு பதிந்து சென்றனர்.

சமவுரிமை இயக்கத்தினால் "இனவாதத்திற்கு - மதவாதத்திற்கு "இல்லை" என்போம்!" துண்டுப்பிரசுமும் விநியோகிக்கப்பட்டது. எதிர்வரும் நாட்களில் சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதத்திற்கு எதிராக பல போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு கறுப்பு ஜீலை வேண்டாம்!: சமவுரிமை இயக்கம் (படங்கள்)