Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்!- கையெழுத்து போராட்டம்

இன்று கொழும்பு மற்றும் களுத்துறையில் பொது மக்களின் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" மற்றும் "அடக்குமுறை சட்டங்களை சுருட்டிக் கொள்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இந்த கையெழுத்திடும் போராட்டத்தில் ஏராளமான பொது மக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் தமது பங்களிப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.