Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் மீது தாக்குதல்!

altபோரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்த்தின் தலைவர் சகாதேவன் மற்றும் பொருளாளர் புஷ்பராஜா புவிலன் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் வைத்து விநியோகித்துக்கொண்டிருந்த போதே அவர்கள் மீது இன்று(06) திங்கட்கிழமை மதியம் 2.30 மணியளவில்  தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை போரினால் பாதிக்கப்பட்ட  மக்கள்  இயக்கமானது வடக்கில் நேற்று(05) ஞாயிற்றுக்கிழமை முதல் விநியோகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.