இலங்கை முழுவதும் சட்டத்தரணிகள் போராட்டம்
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
12 Dec 2012
- Hits: 1908
இலங்கையின் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான கண்டன தீர்மானத்தை வாபஸ்பெறுமாறு கோரி, இலங்கையின் பல பாகங்களிலும் சட்டத்தரணிகள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த தீர்மானத்துக்கு எதிராக சுமார் ஒரு மணிநேரம் பணி பகிஷ்கரிப்பை மேற்கொள்ளுமாறு நாடெங்கிலும் உள்ள சட்டத்தரணிகளை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டிருந்தது.
இப்படியான ஒரு போராட்டம் இலங்கை உச்சநீதிமன்றத்தின் முன்பாகவும் நடந்தது. சுலோக அட்டைகளை தாங்கியவாறு அவர்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்க தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்கக்கூடியவை அல்ல என்று அங்கு உரையாற்றிய பலரும் கூறினார்கள்.
சட்டத்தரணிகளின் போராட்டம் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.