Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மன்னாரில் இடம்பெறும் மர்மக் கைதுகள்! மக்கள் அச்சத்தில்

altமன்னாரில் சில பகுதிகளில் திடீரென ஆயுததாரிகள் சுற்றிவளைத்து அப்பகுதியில் தங்கியிருக்கும் இளைஞர்களைக் கைது செய்து இராணுவ முகாம்களுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

 

இவர்களை விடுவிப்பதற்காக பெற்றோர் குறித்த முகாம்களுக்குச் சென்றால் , பல மணித்தியாலங்கள் காத்திருக்க வைத்துவிட்டு , உங்களுடைய பிள்ளைகள் இம் முகாமில் இல்லை வேறு முகாம்களுக்கு சென்று பாருங்கள் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர் .

கைது செய்பவர்களிடம் சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. தாம் எதற்காக கைது செய்யப்பட்டோம் எனத் தெரியாமலேயே முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.