மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் நடை பயணம் இன்று 03வது நாளாகவும் தொடர்கிறது.
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
26 Sep 2012
- Hits: 2261
கல்வித்துரையில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு தருமாறு கூறி கன்டியிலிருந்தும் காலியிலிருந்தும் ஆரம்பமான நடைபயணம் இன்று மூண்றாவது நாளை எட்டியுள்ளது.சுதந்திரக் கல்வியையும் கல்வியின் சுதந்திரத்தையும் பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் கன்டியிலிருந்து கொழும்பிற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யபட்டிருந்த நடைபயணம் மூண்றாவது நாளான இன்று அம்பேபுஸ்ஸவிலிருந்து ஆரம்பமாகிறது.
பல்லைக்கழக விரிவுரையாளர்களினால் ஏற்பாடு செய்யபட்ட நடைபயனம் மூண்றாவது நாளான இன்று அலுத்கம நகரிலிருந்து ஆரம்பமாகிறது. நேற்றய நடை பயனத்தின் போது கடந்த 19ம் திகதி கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்ட அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சஞ்ஜீவ பண்டாரவும் மிகுந்த உற்சாகத்துடன் கலந்துகொண்டார்.