Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

ஊடகங்களும் இனவாதிகளும்!

எரியும் இனவாத நெருப்பிற்கு எண்ணை ஊற்றும் வேலைகள்!
தமிம்-முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்!

மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்!

யாழில் காணாமல் போன சிறுவன் ஒரு வருடத்தின் பின் கிழக்கில் மீட்பு! முஸ்லீமாக மதமாற்றம்!

தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!மன்னாரில் என்ன நடந்ததென்பது மக்கள் அறிந்த விடயம்! இதில் உண்மை நிலை தெரிந்துதான் அடைக்கலநாதன் இப்படி உளறுகின்றாரோ? தவிரவும் மன்னார் ஆயரை தம்புள்ள பிக்குவுடன் ஓப்பிட்டு பேசுவதில் உள்ள குறுகிய மதவெறியால் சாதாரண தமிழ்-முஸ்லிம்-கத்தோலிக்க மக்கள் மத்தியில், விரோதத்தையும், தான் சார்ந்த அரசின்,நடப்பிலுள்ள மகிந்த இனவாத வெறிக்கு தான் துணை போவதையும், இந்த மந்திரி புரியாரோ? இதுபோக…"தமிழ் சிறுவனை கடத்தி முஸ்லீமாக மாற்றி கொடுமைப்படுத்திய முஸ்லீம்கள்! அதிர்ச்சியில் தமிழ் மக்கள்!"

இந்த ஊடகச் செய்தி எதைத்தான் வக்கிரப்படுத்துகின்றது! எதைத்தான் முதன்மைப்படுத்துகின்றது!? முழு முஸ்லிம் சமூகத்தின் தொழிற்பாடும் இதுதான் என குறுகிய இனவெறி கொண்டு குமுறுகின்றது! தமிழ் மக்கள் கொதிப்தாக சொல்லி, பேரினவாத அரசால் எரியவிட்டிருக்கும் இனவாத நெருப்புக்கு எண்ணை வார்க்கின்றது!இன்று சிறுபான்மை இனங்களைப் பிளப்பதில் கிறிஸ் பூதம் போல் எதை எதை செய்ய முடியுமோ, அதுபோன்ற அத்தனையையும் அரசு செய்கின்றது. இது போன்ற சம்பவங்களுக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியில் உள்ள பிற்போக்கு சக்திகளும் துணை போகின்றன! இது இந்த ஊடகங்களுக்கும் தெரியாதனவல்ல. இருந்தும் இதுகளும் நடப்பில் உள்ள அரசின் இனவெறி நடவடிக்கைகளுக்கு இசைந்து துணை போகின்றன!இவ் இனவெறித் தூபங்களுக்கு தமிழ்-முஸ்லிம் மக்கள் பலியாகாமல், அரசினதும், அதன் பிற்போக்கு எடுபிடிகளுக்கும் எதிராக செயற்படவேண்டும்!

---அகிலன் 20/05/2012