சுமங்கள தேரரும் முஸ்லிம் மக்களிடம் மாட்டிக்கொண்ட அரச விசுவாசிகளும்
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
25 Apr 2012
- Hits: 2223
தமிழர் பிரச்சனையை பயங்கரவாதமாக சித்தரித்து காலத்தை ஓட்டிய அரச பயங்கரவாதம் பாசிசத்தை நிறுவன மயப்படுத்த சுமங்கள தேரர் இறக்கி விடப்பட்டுள்ளார். அமைச்சர் கிஸ்புல்லா மற்றும் அரச துதிபாடுகின்ற நீதி அமைச்சர் கக்கீம் போன்றோர் முஸ்லீம் மக்களிடம் முறையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.
தன்னை தக்க வைப்பதற்காக மகிந்தபாசிசம் புதுவடிவமெடுக்கின்றது.
இது புனிதவலயத்திற்கானது
“வரும் 6 மாதங்களுக்குள் புனித பிரதேசம் என்று கூறப்படும் பகுதியிலுள்ள சகல சட்ட விரோதமான கட்டடங்களும் அகற்றப்படும் என்று தீர்மானிக்கப்பட்டதாக இனாமலுவே சுமங்கள தேரர் பிபிசியிடம் கூறியுள்ளார்”.
இது பாதுகாப்பு வலயத்திற்கானது.
இதேவேளை இந்திய நாடாளுமன்றக்குழுவினரிடம் மகிந்த மன்னவன் வடக்கிலிருந்து “படையினரை வெளியேற்றி இந்தியாவுக்கா அனுப்ப முடியும்?'' குறிக்கப்பட்ட இடங்களில் தான் இலங்கைப் படையினர் தளம் அமைத்துள்ளனர். அவர்கள் ஒன்றும் வெளிநாட்டு மண்ணில் நிறுத்தப்படவில்லை. ” என நீட்டி முழங்கியுள்ளார்.
அமைச்சு பதவி சுகங்களிற்க்காக மகிந்தாவிம் ஒட்டிக்கிடந்து, மக்களை ஏய்த்துப்பிளைக்கும் அரசியல்வாதிகளின் சுயரூபத்தை, அழிவை நோக்கிச்செல்லும் மகிந்த பாசிசம் மக்களிற்கு தோலுரித்து காட்டுகின்ற பணியையும் கூடவே செய்கிறது.
-முரளி 25/04/2012