Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்தாவிடம் நீதி கேட்கப் புறப்படும் நீதிமந்திரி!

முஸ்லிம்கள் மலசலகூடத்தைக் கூட பாவிக்கக்கூடாது!

புத்தத்தின் "புனித" நகராம் தம்புள்ள. ஆங்கேயுள்ள முஸ்லிம் பள்ளிவாசல், புத்த புனிதத்தை கெடுக்கப் போகின்றதாம்.

 

புனிதத்தைப் பாதுகாக்க, புத்த துறவிகள் "காடையர்களாட்டம்" தாக்குதல்கள் நடாத்தியுள்ளார்கள். தம்புள்ள நகரம் கடந்த இரு நாட்களாக புத்த துறவிகளின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

முஸ்லிம்கள் தம்புள்ள நகரில் உள்ள மலசல கூடங்களைக் கூட பாவிக்கக் கூடாதாம். இதனால் பள்ளிவாசலை அகற்றுமாறு சமய விவகார அமைச்சர்  உத்தரவு!

இதற்கு நீதி கேட்டு புறப்படவுள்ளார் நீதி மந்திரி!

உலகில் நீதி கேட்டு புறப்படும், நீதி மந்திரி நம் நாட்டில்தான் உள்ளார்!

 

--அகிலன் 22/04/2012