Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

நோர்வேயில் 77 பேரைக்கொன்றது துப்பாக்கியல்ல ப்ரெய்விக் இனது அரசியல்

"அந்த துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு எல்லாம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயல்கள். அவை தீங்கான செயல்கள் அல்ல" என மிகவும் கம்பீரமாக கழுத்துப்பட்டியும் அணிந்தபடி கொலைகாரன் ப்ரெய்விக்கால் சொல்லமுடிகிறதென்றால்,

 

"அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது. பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்."


எனும் தோழர் சிறியின் கட்டுரையில் வரும் வார்த்தைகள்  நாசிகளின் அம்பே ப்ரெய்விக் என்பதை சரியாக இனங்காட்டுகிறது.

--முரளி 17/04/2012