பாலச்சந்திரன் தப்பியோட புலி சுட்டதாம் - தயா வாத்தியார்
- Details
- Parent Category: ROOT
- Category: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
-
20 Mar 2012
- Hits: 2203
முன்னாள் ஊடகப்பேச்சாளருக்கு, அரச ஊதுகுழலாய் வாழ ஆசையாய் இருக்கின்றது என்பதற்காய் பன்னிரண்டு வயதுச் சிறுவனான பிரபாகரனின் பிள்ளையை புலிகள் சுட்டனர் என்று சொல்லி பிழைப்பதை விடவும்;
இராணுவ கெடுபிடிகள், உளவு பார்ப்போர், கடத்தல், காணாமல் போதல், இத்தனைக்குள்ளும் யுத்தத்தில் தமது குழந்தைகளை, குடும்ப உயிர் மூச்சுக்களை இழந்து மீண்டு வந்த வதைக்குள்ளும் எதிர்த்து நிற்கிறார்களே! துணிந்து நிற்கிறார்களே! அவர்கள் மானுடர்.
அதைவிடுத்து எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும், அவர் தப்பியோட முயற்சித்த போது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனக்கூறி வாழ்வது எந்தவகையென்பது தயா வாத்தியாருக்கே வெளிச்சம்.
-முரளி 20/03/2012